ஊர் உலகம்
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
சோற்றுப் பீங்கானைக் கையில் எடுக்க
பூனைக் குடும்பம், காக்கைக் குடும்பம்கப்பெரிய கூட்டமாய்
அவர்களின் பார்வைகள் –
என் வாயினைத் திறக்க விடாது தடுத்தன!
கற்பனையில் ஒரு கவிதை தொடர
ஊர் உலகம், வாழ்வு தாழ்வு,
உள்ளத்து உணர்வுகள்
சோதனைகள் வேதனைகள்
இத்தியாதி இத்தியாதி
இதயத்தை முட்கம்பிகளாய்க் கிழித்தன.
ஆனால்
அந்த
மூச்சும், சுவாசமும்
அன்பும் நட்பும்
நினைவுகளும் நிஜங்களும்
அப்படியே இன்றும்
ஒரு
துளிகூடக் குறையாமல்
எனக்குள் நிறைவாக ஊற்றெடுக்கின்றது!