-பா.ராஜசேகர்

தினம் காலைப்பொழுது
இனிதாக விடியவேண்டும்!
அசைந்தாடும் செடிகொடிகள்
குளிர நல்மழைவேண்டும்!

நதி நீரெல்லாம் முழு
தேசம் பகிரவேண்டும்!
பந்தபாசம் மனிதரிலே
பெருகவேண்டும்!

சாதிமத பேதமில்லா நாடென்று
உலகம் காணவேண்டும்!
பசிக்கொடுமை பகல்
கனவாய் மாறவேண்டும்!

நடிகர்களைத் தெய்வமாக்கும்
நிலை மாறவேண்டும்!
நல்மனிதர்களை மதிக்கும்
நிலை உயரவேண்டும்!

தமிழன் தலைநிமிர்ந்து
பவனிவரும் வரம்வேண்டும்!
பரதத்தாயை பார்புகழப் பார்த்ததுமே
என்னுயிர் போகவேண்டும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *