-மீ.விசுவநாதன்

நதியைப் பார்த்தேன்
கரையில் நின்று
முதலில் பயமாக இருந்தது…
குனிந்து தொட்டுத் தலையில்
தெளித்துக் கொண்டேன்…
மெல்ல வலது காலை
நனைத்து
இடது கால் விரல்களை
ஈரமாக்கி உடனே
நீருக்குள் நடந்தேன்…

மேலே குளிர்
மெல்லிய சூடு
கழுத்துக்குக் கீழே…
மூன்று முங்கு போட்டேன்!

இன்று…
மண்டபத்தின் மேலிருந்து
நீரில் குதித்து நீந்தினேன்
சுகம் பரம சுகம்…!

கற்றுத்தரும் குருவிடமும்
முதல் பயம் பாசமாகிப்
பக்தியாகி வித்தை முழுதும்
நன்றாகக் கசடற
உள்ளே இறங்க வைக்கிறார்!

அப்புறம்…
அப்புறம் என்ன அப்புறம்
எப்போதும் என் நினைவில்
அவர்
ஒரு நதியைப் போல!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *