-ராஜகவி ராகில்

உயிர் பெறுவதற்குக்
காத்திருக்கிறது
உன் மொழி!

வயலின்                                                         Mom n baby
வீணை
புல்லங்குழல்
எல்லாம் சேர்ந்த
தனி
இசைக்கருவி நீ!

செடிகள்
பூப் பூக்கின்றன
நீ தவழ்வது பார்த்து
ரசிப்பதற்காக!

உன் விழிகள் காண்பதென்றால்
விண்மீன்கள் வரும்
பகலிலும்!

நீ மூச்சுவிடும்போது மட்டும்தான்
சுத்தம் அடைகிறது
காற்று!

உன் விரல்கள் தொட்டுப்பார்க்க
எத்தனை ஆசை தெரியுமா
மலர்களுக்கு?!

தாய்க்கு
உயிர்கொடுத்த
தென்றல் நீ!

உலகில்
அதிசயங்களே இல்லை
உன்னைத்தவிர!

இறைவன் நிகழ்த்திய
மகிழ்ச்சி நீ!

அதோ…
உன் புன்னகை தேடி
வருகின்றன
பட்டாம் பூச்சிகள்!

உன் முதல் வார்த்தை அம்மாதான்
என்றாலும்
அவள் காத்திருக்கிறாள்
குழந்தையாக!!

***

படத்துக்கு நன்றி: கூகுள்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *