யாரோ யாரையோ
விரட்டிவந்த பொழுதில்
பயந்து விலகி
தடுமாறி நகர்ந்ததில்
தானாக ஏற்றப்பட்ட
பேருந்தில்,
நெரிசலில் சிக்கி
என்னைப் போலவே
முகம் சுளித்துத்
திரும்பிய அவளின்
கணப் பார்வை
சந்தித்த பொழுதோடு
என்னைப் போலவே
வந்து, நசுங்கி, பின்
கடந்து, நடந்து போய்க்
கொண்டிருக்கலாம்
இன்னொருவரும்…!
நான் கவிஜி.. (B.COM, MBA, DIP IN ADVERTISING.)
கோவையில் வசிக்கிறேன்…
கவிதை தேடுகிறேன்…. கதைகளாய் கிடைக்கிறேன்…..
காடும் தனிமையும் பிடித்த வாழ்வியல் எனது….
குறும்படங்கள், புகைப் படங்கள் எடுப்பது… பிடிக்கும்…….
வாழ்வை அதன் போக்கில் வாழ்பவன்….
தாஸ்தாவெஸ்கி யின் தீவிர வாசகன்…
“சே” வின் மிகப் பெரிய பற்றாளன்…
சக மனிதனை மதிப்பவன்….
மனிதம் வளர்த்தால் எதுவும் வளரும் அதில் இலக்கியமும் என்பவன்…
தொடர்ந்து என் படைப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வல்லமையில் இணைவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்….