-மீ.விசுவநாதன்

மானேந்தி யப்பரே, மயிலேறும்
–மகனுடைச் சீடரே, பெருந்தீத்                            lord-shiva
தானேந்தும் கையரே, ஒருகாலைத்
–தவநிலை யோகியே, உள்ளத்
தேனேந்தும் பூவரே, மறுகாலைத்
–திறனுடன் மாற்றிய கலையே!
ஊனேந்து(ம்) ஆசையை விழியாலே
–பொசுக்கிட வந்தருள் சிவனே!

(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், விளம், காய், விளம், விளம், மா)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *