-பா.ராஜசேகர்

அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம் போதும்!
துஞ்சித் துஞ்சி வீழ்ந்தகதை எப்போ மாறும்?

பொய்மூட்டை புளுகைக்காட்டி ஓட்டுக் கேட்டான்!
பொன்முட்டை வாத்துத் தரேன் மாற்றம் கேட்டான்!

ஏமாந்தவன் எல்லோரும் ஓட்டுப் போட்டாங்கையா!
எடுபட்டவன் ஆட்சியைப் புடிச்சிட்டான்யா!

கூறுபோட்டு நாட்டையே விற்கிறாண்டா!
காசைவாங்கிக் காற்றைக்கூடக் கெடுக்கிறாண்டா!

இயற்கை தந்த தண்ணீருக்கும் விலையை  வச்சான்!
ஏழையோட வயத்திலே உலையை வச்சான்!

சொல்லச்சொல்ல வேதனைகள் என்னசொல்ல?
போதைவிற்று ’கஜானா’ நிரப்பும் அரசுதாண்டா!

அரசியலில் நல்லவர்கள் ஒதுங்கிநின்றால்
குள்ளநரிக் கூட்டம் நின்று ஆட்டம் போடும்!

வெட்கம் வேண்டாம் நல்லோரே சுத்தம் செய்வோம்!
நாட்டைக்காக்கக் குள்ளநரிக் கூட்டம் வெல்வோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *