ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 16

0

சி. ஜெயபாரதன்.

 

கலில் கிப்ரான்

 

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நமது பூமி

நமது பூமி
____________________________

மகள் ஒருத்தி தாயின் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற மறுத்தால், அந்தத் தாய் சொல்வாள் : “தாயை விடத் தாழ்ந்து போனவள் மகள். தாயின் தடத்தில் நடக்க வேண்டும் புதல்வி.”
கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)
____________________________

புவியே என்னே உன் எழில் !
____________________________

எத்தகை எழிலுடன் உள்ளாய்
புவியே நீ !
எத்தகைப் பெருமிதம் உனக்கு !
எத்தகை பூரணப்
பணிவு மனம் உனக்கு
பரவும் ஒளி மீது !
எத்தகை நேர்மைத் தணிவு
இரவி மீது உனக்கு !
எத்தகை வனப்போடு உள்ளாய்
நிழலில் மூடி !
எத்தகைக் கவர்ச்சி உள்ளது முகத்தில்
மர்மத்தைக்
கவசமாய்க் கொண்டு !
____________________________

எத்தகை மன அமைதி அளிக்கும்
புலரும் காலைப் பொழுது
புனையும் கீதம் !
எத்தகைக் கடூர மானவை
உனது புகழ்ச்சிகள் !
எத்தகை பூரணம் உனக்குப்
புவியே !
எத்தகைக் கம்பீரம் உனக்கு !
உனது சமவெளி களின் மேல்
உலவி வந்துளேன் !
உனது மலைச் சிகரங்களில் ஏறி
ஊர்ந்தி ருக்கிறேன் !
உன் பள்ளத் தாக்குகளில்
இறங்கி வந்துளேன் !
உனது குகைகளின்
ஊடே நுழைந் திருக்கிறேன் !
____________________________

உனது கனவுகளைக் கண்டேன்
நினது சமவெளிகளில் !
உனது பெருமிதம் கண்டேன்
நினது மலைகளில் !
உனது பேரமைதிக்குச் சான்றானேன்
நினது பள்ளத் தாக்குகளில் !
உனது தீர்மானம் நிறைவேறும்
நினது குன்றுகளில் !
உனது மர்மங்கள் ஒளிந்திருக்கும்
நினது குகைகளில் !
____________________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *