ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

0

-சுரேஜமீ 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பப்
பாரறிவான் பகன்றது விளம்பிப்
பேருலகில் யாவரும் விளங்கப்
போற்றுமொரு பெருநாள் இதுவே!

பொங்கிவரும் அன்பின் உணர்வைப்
பகிர்ந்து வளம்பெருக வாழ
வருடம் ஒருமுறை வருமே
வாழுலகில் உறவைப் போற்ற!

ஈகைத் திருநாள் இன்று
ஈரத்தை நெஞ்சில் வைத்து
ஈந்து உலகில் வாழ்கவெனும்
ஈத்-அல்-அதாத் திருநாள்!

வாழட்டும் மனிதம் என்றும்
வாழ்த்துக்கள் எட்டுத் திக்கும்!
வாழ்த்துக்கள் உறவுகளே
வாழி நல்வாழ்த்துக்களுடன்!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *