-ஆர். எஸ். கலா

கைபேசியைக் கையாளும் ஆண்மகனே…
கொஞ்சம் காதல்மொழி பேசு கண்ணா!
புது உறவாய் வரவுதந்த சின்னவனே
மறுப்புமொழி போடலாமோ மன்னவனே?

காதலின் நிறம் காட்டவந்தாய்
இருண்ட இதயவாசல் திறந்து வைத்தாய்
இறந்த காதலுக்கு உயிர்கொடுத்தாய்
இதயம் இடம்மாற தடை போடுகிறாய்

இமயம் போல் உனை நினைத்தேன்
இமைபோல் காப்பாய் என்று மதித்தேன்
உன்னால் உலகத்தை மறந்தேன்
ஊட்டிக் குளிர்போல் உள்ளம்  மகிழ்ந்தேன்

அன்பே நீ அருகில் இருந்தால்
ஆவாரம் பூவாய் நான் மகிழ்வேன்
சிட்டாய்ச் சிறகு விரிப்பேன்
வட்டமிட்டு நான் பறப்பேன்

ஆனால் இன்று…
சோகத்தில் ஆழ்ந்துவிட்டேன்
இந்துக்கோயில் எல்லாம் வரம் கேட்டேன்
வங்கக்கடல் போல் கண்ணீர் அள்ளுகின்றேன்
இறுதியில் இறப்புக்கும் நாள் குறித்துவிட்டேன்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *