மயிலை கற்பகாம்பிகை – நவராத்திரி நாயகியர் (1)

0

 

க. பாலசுப்பிரமணியன்

 

கற்பகாம்பிகை – மயிலை

kabali

கற்பகமே ! அற்புதமே !!

கருணையின் தத்துவமே !!

கயிலையின் கனியமுதே !

மயிலையின் முத்தமிழே !!

 

கற்சிலையும் காந்த நிலை

கண்களிலோ அன்பின் விதை

கைகளிலே கருணை மழை

காலமெல்லாம் உந்தன் கதை !

 

மயிலாக நீ வந்தாய்

ஒயிலாக நீ நின்றாய்

மலராலே நீ துதித்தாய்

மகேசனை நீ அணைத்தாய் !

 

மாதவம் செய்தோரும்

மாமுனி குலத்தோரும்

மனங்கனிந்து அழைத்தோரும்

மாதங்கி! உன்னைப் பணிவார்!

 

நாதங்கள் வடிவாகி

நமச்சிவாயம்  ஒன்றாகி

நானிலம் ஆட்சிசெய்யும்

நவராத்திரி நாயகியே!

 

நல்லோர்கள் காத்திடவே

வல்லோர்கள் வாழ்ந்திடவே

இல்லாமை நீங்கிடவே

இசையாக இன்றே வருவாய்!

 

படத்திற்கு நன்றி: http://nellaichokkar.blogspot.in/2012/06/blog-post.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *