நவராத்திரி நாயகியர் (4) -சமயபுரம் – மாரியம்மன்
க.பாலசுப்பிரமணியன்
திரிபுரத்தைக் காப்பவளுக்குத்
தேரிழுக்க ஓர் புரம் சமயபுரம் !
தீராத நோய்களையும் தீர்த்திடுமே
தேவியவள் தெய்வவரம்!
தீச்சட்டி ஏந்தி வந்தாலும்
தீந்தமிழில் பாடி வந்தாலும்
திருவுள்ளம் அவளுக்கு ,
தீமைகள் போக்கிடுவாள் !
மாவிளக்கு மனதில் ஏற்றி
மாரியவள் பெயர் போற்றி
மனமுருகி நின்றாலோ
மனமிரங்கி வந்திடுவாள் !
ஆத்தாவென அழைப்போருக்கு
அடைக்கலமே தந்திடுவாள் !
அங்கங்கள் சந்நிதியில் தரைபுரள
அருள்புரிய எங்கெங்கும் வந்திடுவாள் !
கூழெடுத்துக் கொடுத்திடுங்கள்
கூடவந்து அவள் நிற்ப்பாள் !
கூடிவந்த ஊழ்வினையைக்
கூறாமல் விலக்கிடுவாள் !!
கல்லாக இருந்தாலும் கருணைக்கடலே
சொல்லுக்குள் அடங்காத சொற்சுவையே
கண் கொடுத்த தெய்வமன்றோ !
காலமெல்லாம் அவளை மறப்பதுண்டோ ?
பகலென்ன, இரவென்ன,
பார்ப்பதற்கு நேரமென்ன?
திருமுகத்தை கண்டவர்க்கு
தினந்தோறும் நவராத்திரி !
ஆழ்ந்த பக்தியும் அதன் அநுபவமும் தெள்ள தெரிகிறது துள்ளி அளிக்கிறது