கிரேசி மோகன்

Laksmi

“பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
 நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
 சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
 தாரங் களின்தயவால் தான்”….

”உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்
 பத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்
 சாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
 காணலாம் பொன்மகளின் கால்”….

“உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
 பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
 மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி
 பாலின் நிறத்தில் பொலிவு”….

“மஞ்சள் அரிசியில் மங்கல வாத்யத்தில்
 வஞ்சியர் கல்யாண வைபவத்தில் -நெஞ்சணைந்த
 தாலியில் தங்கமாய்த் தங்கியவள் தாம்பத்ய
 வேலியைக் காக்கும்செல் வி”….

“பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த
 பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்;
 வீடு வரையுறவு வீதி வரைமனைவி
 காடு வரைநெற்றிக் காசு”….

“அக்காள்மூ தேவி அயர்ந்துறங்கும் இல்லத்தில்
  நிக்காள்ஸ்ரீ தேவிஎன்பர் நூலோர்கள் -முக்காலம்
  தூங்கும் பெருமாளின் தூய திருவடிகளை
  தாங்குவதால் தூங்காமல் தூங்கு”….

”வித்தைக்கு  வேண்டும்  வினயம்,  அதிதீர
 சித்தத்தில்  வேண்டும்  சரிசமம் -சுத்தத்தை
 வேண்டுவாள்  செந்திரு,  வாசல்  தெளிப்போர்க்கு
 யாண்டும்  வறுமை  இல”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *