-தமிழ்நேசன் த.நாகராஜ்

தமிழா தமிழா…தமிழ் பேசு!
அழகாய்க் கனிவாய்த் தமிழ் பேசு
அரும்பெரும் ஊற்றாய்த் தமிழ் பேசு
அழிவில்லாத் தமிழில் நீ பேசு
அறிவொளியாக மிளிரத் தமிழ் பேசு    tamila tamila

உணர்வாய் உயிராய் தமிழ் பேசு
உண்மைத் தன்மையில் தமிழ் பேசு
ஊழிவெல்லத் தமிழில் நீ பேசு
உன் திறமைகள் வளர்த்திடும் தமிழ் பேசு

பாரதி எழுச்சியுடன் தமிழ் பேசு
பாவலர் எழுதியளித்த தமிழ் பேசு
பழியில்லாத் தமிழில் நீ பேசு
பலசிறப்பு உனக்களிக்கும் தமிழ் பேசு

வள்ளுவன் குறளாய்த் தமிழ் பேசு
வற்றாத நேசிப்புடன் தமிழ் பேசு
வழி தந்த தமிழில் நீ பேசு
வண்ணமாய் ஒளிரவே தமிழ் பேசு

தீண்டாமையை ஒழித்த தமிழ் பேசு
தீவாய் நீவாய்த் தமிழ் பேசு
தீக்கதிராய்த் தமிழில் நீ பேசு
தீங்கனியின் இனிமையாய்த் தமிழ் பேசு

தமிழா தமிழா…தமிழ் பேசு!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *