ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 26

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

 

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

இயற்கையும், மனிதனும்
______________
“நேற்று இரவின் பயத்துக்கும், பகலின் இடருக்கும் இடையே நாம் அச்சத்தால் நடுங்கிப் பேய்கள் போல் ஊர்ந்து சென்றோம் ! ஆனால் இன்று புயல் மேவி இடி தோன்றும் மலைச் சிகரத்தை நோக்கிப் பூரிப்போடு நடந்து செல்கிறோம்.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
______________

இயற்கை அழிக்கும் மனிதன்
______________

கண்ணீர்க் கறை படிந்த
பூக்களின்
முகத்தைக் கண்டேன் !
முணு முணுக்கும் துயரோசை
காதில் விழக் கேட்டேன் :
“கண்கவர் மலர்களே !
நீவீர் நோவதின்
காரணம் யாது ?”
தலையை மெதுவாய்த் தூக்கி
முணு முணுத்தது ஒரு மலர் :
“மனிதன் வருவான் !
மலர்களைப் பறிப்பான் !
விலைக்கு விற்பான்
அங்காடிக் கடைக்கு !
அழுகின் றோம் அதற்கு.”
அடுத்தோர் மலர் சொல்லும் :
“மாலையில் வாடியதும்
குப்பைக் குவியலில்
தூக்கி எறிவான்
பூக்களை எல்லாம் !
இயற்கை யான
எம்மிடத்தை விட்டுத்
தலைகளைக் கொய்யும்
மனிதனின்
கொடூரக் கைகளுக்கு
நடுக்கம் அடைகிறோம் !”
______________

செத்த பிள்ளைக்குச்
சிந்தை நொந்திடும்
விதவை போல்
நீரோடை ஒன்று அழுவதின்
காரணம் கேட்டேன் :
“நோவது ஏனோ தூய
சிற்றாறே ?”
நீரோடை கூறியது :
“வற்புறுத்தி என்னை நகருக்கு
விற்றார் !
குடிபான நீராய்ப் பணத்துக்கு
வடிவாக் கினார் !
உடல் உறுப்பு கட்குக்
கழுவு நீராய்ப்
பயன் படுத்தினார் !
மாசு படுத்துவர் எமது
தூய்மையை !
நாறிப் போகும் எனது
நற்பெயர் !
______________

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *