பறவைகளுக்கு உணவு தரும் பழ மரங்களை நடுங்கள்

0

பறவைகளுக்கு உணவு தரும் பழ மரங்களை நடுங்கள் …  பறவைகள் ஆர்வலர் பேச்சு …

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பறவைகள் அறிமுகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பெண் மருத்துவர் பார்கவி முன்னிலை வகித்தார். பறவைகள் ஆர்வலர் பிரசன்னா சிறப்புரை நிகழ்த்தும்போது பறவைகள் பற்றியும் அவற்றின் நன்மைகள் பற்றியும், காடுகளில் அதிகமான மரங்கள் வளர்வதற்குப் பறவைகள்தான் காரணம் என்பது பற்றியும், மரம் நடும்போது பறவைகளுக்கு உணவு தரும் பழ மரங்களை நடுங்கள் என்றும், இருவாட்சி, கொக்கு, தையல்கார குருவி, மான் சிட்டு, தவிட்டுக் குருவி, மீன் கொத்தி, கிளி வகைகள், மரங்கொத்தி போன்ற பறவைகளின் படங்களை காண்பித்தும், அதன் குணங்களை தெரிந்து கொள்ள செய்தும் விளக்கிப் பேசினார்.

IMG_4370

மேலும் பேசுகையில், மனிதன் இல்லாமல் பறவைகள் வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாமல் மனிதன் வாழமுடியாது. எனவே பறவைகள் அழியாமல் பாதுகாக்க பழம் தரும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாணவிகள் பரமேஸ்வரி, தனலெட்சுமி, சந்தியா, ராஜலெட்சுமி, கார்த்திகா, கிருத்திகா; மாணவர்கள் ஜீவா, ரஞ்சித், ராஜேஷ் ஆகியோர் பறவைகள் தொடர்பாகக் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பறவைகள் அறிமுகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சியினை பறவைகள் ஆர்வலர் பிரசன்னா விளக்கிக் கூறினார்.
உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *