அண்ணாமலையில் ஒரு அக்கினிப் பொறி   

0

க. பாலசுப்பிரமணியன்

p53

ஆகாய கங்கையிலிருந்து ஒரு அக்கினிப்பொறி

அண்ணாமலைக்கு அருள் சேர்க்க வந்தது !

அன்னையிட்ட பெயரின் பொருள் தேடி

விண்ணை நோக்கிப் பிள்ளை தவமிருந்தது !

 

பாலூட்டி ஊட்டிட்ட பெயரும்  என்ன !

பார்கூட்டி அழைத்திட்ட பெயரும் என்ன !

ஊனூட்டி  வளர்த்திட்ட  உயிரும் என்ன !

உடலோடு  உயிர் சேர்த்த உறவென்ன !

 

ஊருணி விலக்கிட்ட ஒரு நீர்த் திவலைபோல்

ஊழ்வினை கழித்திடவே  உயிர்  வந்ததோ ?

வாழ்விடை வந்த உறவுகள் பாசத்தில் வாடும்

தானுறை  தவமே  வருவினை  போக்கிடும் !

 

கோடியில் ஒருவனாய் குழந்தை ரமணன்

நாடிய துறவும் நானினை அறிந்திட !

சோதியைக் கண்டவன் சுமைகள் களைந்திட

வாடிய உலகிற்கு வழிதனைத் தந்தான் !

 

ஆதவன் ஒளி போல் அகமொன்று ஒளியிட

கான்வழிக் கானல்நீர் வாழ்வென அறிவாய்  !

கரையில்லா வெள்ளம்போல் காமக் களைப்பில்

கலங்கிய மனமோ காலமெல்லாம் வாடும் !

 

கந்தை மனத்தைக் கசக்கிப் பிழிந்து

சிந்தையை அடக்கிச் சிவனிடம் தந்தால்

விந்தையே! விந்தையே! அருணாசலா!

வெளிச்சமே ! வெளிச்சமே ! லிங்கேஸ்வரா!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *