மார்கழி மணாளன்  2- (காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள்)

0

க. பாலசுப்பிரமணியன்

 fcf83c72-1d36-44e4-a660-d6b0f85e3e61

கையேந்தி வந்தவர் மெய் நிறையும்

கண்ணிறைந்து அவர் மனம் நிறையும்

கார்மேகம் நடு  நில் கதிரவன்போல்

காஞ்சியிலே வரதனின் அருள்காட்சி !

 

வருந்துயரும் வாராது சென்றுவிடும்

வரதனின் அருட்பார்வை வென்றுவிடும் !

பெருந்துயரும் பனிபோல நலிந்துவிடும்

பெருந்தேவி துணைகண்ட பெருமானே! !

 

அபயக்கரம் தரும் அருள் வெள்ளம்

அதைப் பெருக்கும் சங்கு சக்கரம் !

ஒளிவெள்ளம் அவன் திருமேனி

விழிவண்ணம் வற்றாத அருள்கேணி !

 

பல்லிக்கும் அருள்தந்த பரந்தாமன்

அள்ளிக்கொடுக்கும் திருமங்கை மார்பன் !

பன்னிரு ஆழ்வார் போற்றிய நாதன்

பாரெல்லாம் காத்திடும் பேராளன் !

 

அத்தியூரான் அவன் முக்தி தருவான்

அலங்காரப் பிரியனவன் ஆனந்தன் !

அலைபாயும் மனமடங்கக் கீதை சொல்வான் !

அச்சமின்றி வாழ்ந்திடவே அருள் புரிவான் !

 

குறையொன்றும் எனக்கில்லை நீயிருக்க

குரலெடுத்துப் பாடுங்கள் கோவிந்தனை !

குறையின்றிக் கொடுக்கின்ற வள்ளலவன்

குழந்தைபோல் நம்மைக் காத்திடுவான் !

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *