மார்கழி மணாளன்  11 ஸ்ரீ வில்லிபுத்தூர்   ஆண்டாள் – வடபத்ரசாயி   

0

க. பாலசுப்பிரமணியன்

47_big

மலர்வனத்தில் மலர்ந்த மழலை

மாலனைத்தேடி மண்வந்த மங்கை

மாதர் மனம் கவர்ந்த கோதை

மார்கழிப் பாவை மாதருக்கு கீதை !‘

 

விஷ்ணுசித்தன் அறியாத மாயை

விஷ்ணுவின் சித்தம் அறிந்த ராதை !

விடியலிலே கண்ணனைக் காணும் போதை

வேங்கடனை நாடிச் சென்றாள் இந்த சீதை !

 

கோகுலனுக்குக்  கோர்த்து வைத்த மாலை

கோதை அணிந்தே கேட்டாள் நித்தம் காலை

“குறையோ? கண்ணா !! உனக்கிணை இது சரியோ?

இறையே ! உயிரே ! இதயத்தில் இடம் உளதோ ?”

 

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி கண்டு

சொல்லிழந்து உணர்விழந்து சித்தனுமே

செயலிழந்து நிலையிழந்து நின்றான்

சோதனையோ? மாதவனேயென வியந்தான் !

 

ஆண்டவளின் அன்பில் வளர்ந்த அரங்கனும்

ஆதவனின் ஒளிபோல் அவளை அணைத்தான்

ஆயிரம் பாசுரங்கள் அண்டங்களில் ஒலிக்க

அரங்கனின் அருளாட்சி ஆண்டாளின் சந்நிதியில் !!

 

கோவிந்தனிடம் கோதை கொண்ட காதல்

குவலயமே வியந்திடும் உறவின் தேடல் !

பாவையவள்  பாசமுடன் பாடிட்ட பாவை

பாரினிலே பாவையர்க்குக்  காதல் பாதை !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *