நான் அறிந்த சிலம்பு – 192
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை
குரலை முதலாகக் கொண்டு
புனையப்பட்ட பெயர்களுடைய அப்பெண்கள்,
முதலில் சமமாக நின்றும்
பின் வட்டமான வடிவில் நின்றும்
நண்டின் வடிவமாய் நின்று
கைகளைக் கோத்துக் கொண்டு
கூத்தாட்டத்தின் தாள உறுப்புகளை ஆராய்ந்தனர்.
அவர்களுள் குரல் என்ற பெயர் உடைய
பூங்கொடி போன்றவள்,
தமது கிளையாகிய துத்த நரம்பின்
பெயர் கொண்டவளைப் பார்த்து
“அகன்ற கொல்லைப் புனத்தில்
நின்ற குருத்த மரத்தினை
வஞ்சத்தால் முறித்த மாயவனைப்பற்றி
முல்லைப் பண் இசைத்துப் பாடுவோம்” என்றாள்.
பின் முல்லைப்பண்ணைப் பாடத் தொடங்கினர்.
குரல் எனும் பெயர் கொண்டவளின் ராகம்
மந்தமாக இருக்க,
இளி எனும் பெயர் கொண்டவளின் ராகம்
சமமாக இருக்க
துத்தம் எனும் பெயர் கொண்டவளின் ராகம்
சற்றே வலிமையாக
முறைப்படி ஒலித்தன.
விளரி எனும் பெயர் கொண்டவள்
வலிமையில்லாத மந்தமான ராகமாய்த்
துத்தம் என்பவளுக்குச் சுருதி பாடத் தொடங்கினாள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html
படத்துக்கு நன்றி: கூகுள்