மார்கழி மணாளன்  -19 பத்ரிநாத் – ஸ்ரீ பத்ரி நாராயணர்    

0

 க. பாலசுப்பிரமணியன்

83faee00-5aec-4ba4-a5b4-01671653a8ee

பனிமலையைத் திருமலையாய் கொண்டே

அருள்  மழையால் கலி தீர்க்கும் நவநீதா !

ஊனுருக நினைத்தோரைத் தன்னருகில் வைத்தே

வானுயர்ந்த வளம் தருகின்ற குணசீலா !

 

பாதங்கள் ஆயிரம் நான் போற்றினாலும்

பத்ரிவாசா ! புகல் பாதம் உனதன்றோ  ?

பத்மாசனத்தில் அமர்ந்தோனே ! பரந்தாமா!

பால்வண்ணப் பனிமலையில் கார்வண்ணா !

 

பனிகாத்தாள் பொற்செல்வி பத்ரிமரமாய்

புவிகாக்க நீ அமர்ந்தாய்   புனிதனாய் !

புகழ்பாடும் நாரதனும் புகல் கேட்டான்

புண்ணியனே ! போற்றியதே மண்ணினமே !

 

ஆன்மாவிற்குப் பொருள் சொன்ன பரமாத்மா

ஆனந்தா ! அலர்மேல் மன்னா ! அச்சுதா!

மோனத்தில் தியானத்தில் அமர்ந்த முகுந்தா !

வானத்தில் இருப்போரும் வணங்கும் வைகுந்தா !

 

வேதத்தில் நாதத்தில் விளைந்தோனே விஸ்வரூபா !

தேகத்தில் உயிராய் திகழ்வோனே தாமோதரா !

பாசத்தில் அழைத்தோர் அன்பினிலே ஆதிமூலா!

பாசத்தின் வேடங்கள் உடலென்ற பத்ரிநாராயணா !!

 

காலங்கள் அனைத்திற்கும் பாலம் நீயன்றோ !

கடமைகள் முடிந்திடவே காட்சியும் உனதன்றோ !

கற்பனையில் கண்டாலும் கணத்தினிலே வந்திடுவாய் !

கண்ணா! மணிவண்ணா! காலமெல்லாம் நீயே காப்பு !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *