-கவிஜி 

நதி எரிக்கிறது
குளிர்உதிர்த்த
மதியின் நிறம்!

——–

இறுதி ஊர்வலத்தில்
தெரியாமல் விழுந்துவிட்ட
ஒரேஒரு முள்கூட
மரணத்தை
வன்மையாகக் கண்டிக்கிறது!

——–

எல்லா ஊர்க்
கோவில்
ஆலய
மசூதி
வாசல்களிலும்
இந்தியப் பிச்சைக்காரர்கள்!

——–

தலைகீழாய்த்
தொங்கும் கயிற்றில்
நேராக இறங்குகிறது
எறும்பு…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *