மார்கழி மணாளன் 22 திரு அன்பில் – வடிவழகிய நம்பி  

0

 க. பாலசுப்பிரமணியன்

7e4175fa-f573-49ca-b2e5-0ba6d431f218

நீர்பாதி நிலம்பாதி தன்னில் தவமாக  உடல் நிறுத்தி

நிலையில்லா மனம்தன்னை இறை நினைவில் நிறுத்தி

நினைவின் கருவாய் நீர்வண்ணன் உருவம் நிறுத்தி

நினைவிழந்த தவத்தோனாய் நின்றான் சுதபனுமே !

 

சுடுசொல்லில் சுவைகண்ட துர்வாசர் நிலையிழந்து

உருமாற்றி உருக்குலைந்த தவளையாய் உருவாக்க

உள்ளத்திலே தவமாகத் தாமோதரன்  மட்டுமிருக்க

உளம்கனிந்த வடிவழகன் சுதபனுக்குக் காட்சி அன்பில் !

 

தன்னழகில் நிலைகுலைந்த தவத்தோன் நான்முகனும்

விண்ணுலகில் வேறில்லையென்ற மமதையில் நிற்க

வடிவழகன் கண்டதுமே விழிநிறுத்தி வியந்தான் அன்பில்

கண்ணமுது தேடியவன் விண்ணமுது கிடைத்திடவே !

 

கண்ணழகு காலழகு கையழகு கண்ணா !

காண்கின்ற திசையெல்லாம் உன்னழகு !

கோலாட்ட நடையழகு கைகளிலே குழலழகு

குசேலன் நட்பழகு நீ குறைவில்லா வடிவழகு !

 

வாமன வடிவழகு!  வளர்ந்திட்ட விஸ்வரூபம் அழகு !

வராஹ வடிவழகு! வீரனே! வில்லுந்தன் கையழகு !

தாழம்பூ மணமழகு! உன்னருகே தாயாரின் துணையழகு !

தாளாத அன்பழகு ! தூயவனே, உன் திருவுள்ளம் அழகு!

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *