-கவிஜி 

வோல்கா கரையெங்கும்
உன்கனவு மழை
போத்தல்
திறக்காத போதும்
மதுவின் மழை
என் மனங்கும்…!

வழி மாறியதோ,
விழி தூறியதோ,
உள்ளம் பொங்கும்
துளிகளின் நிலவுக் கூட்டம்…

வண்ணப் பிறழ்வுகளின்
மாமரத்துத் தனிமையென,
தலைவிரித்த பெருமழைக்குள்
நம் நிழல் வட்டம்…!

காகிதப்பூக்கள் கப்பலான
தத்துவத்தில்
ஆளுக்கொரு ஜன்னல்
நெடும் பயணம்…!

திறவாத கூட்டுக்குள்
திறம்பட வரைந்த
தூரிகையில் சொட்டும்
நிறமற்ற மழை
குடியற்ற நம்வெளி…!

மழைக்கு ஒதுங்கிய
பாதங்களில்
மனம் நிறைக்கும்
மழை, வீடெங்கும்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *