மார்கழி மணாளன் – 27  திருக்கண்ணபுரம் – சௌரிராஜப் பெருமாள்

0

 க. பாலசுப்பிரமணியன்

a0c91dd0-6b87-4e67-b173-c7053220b073

கண்ணனின் கண்ணசைவில் கனிந்துவரும் பூபாளம்

குழலூதும் கையசைவில் காற்றிசைக்கும் மோகனமே

காலிரண்டும் தாளமிட கண்சிமிட்டும் கல்யாணி

கார்மேகன் கண்ணபுரம் காலமெல்லாம் ஆனந்தபைரவி !

 

கண்ணனின் கோவிலுக்கு மன்னவனும் மலரனுப்ப

கள்ளமாய் பட்டரும் அதை காசுக்கு விற்றார் !

கண்டறிந்த மன்னனுக்கு அளித்த மாலையிலே

கரியதோர் மயிர் கண்டு கலக்கமுற்றான் வேந்தனுமே !

 

கள்வனுக்குத் துணைவந்தான் கள்வன் கண்ணனுமே

கரியதோர் சிகை கண்டு கண்டோரும் வியந்தனரே

கண்ணனும் பெயர் கொண்டான் சௌரிராஜன்

கணநேரம் நினைத்தாலும் காத்திடும் கண்ணபுரமே !

 

மனமுடைந்து நின்றான் பக்தியுடன் முனயோதரன்

மங்கலமாய் பொங்கலிட காலம் கடந்ததேன்றே !

மனம்கசிந்து மாதவனும் மணியோசை ஒலித்திடவே

பொங்கல்மணம்  பொங்கிடவே அருள் செய்தான் !

 

கண்ணபுரத்தான் கைப்பிடித்தான் மீனவப் பெண்ணை

காசினியில் சாதி பேதம் நீக்கி சமத்துவம் படைத்திடவே !

பாருள்ள படைப்பெல்லாம் பரந்தாமன் பார்வையில் ஒன்றே

பாதைகள் வேறானாலும் போகுமிடம் பரமபதம் ஒன்றே !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *