மீ.விசுவநாதன்

images
வாயொன்று கூற மனமொன்றை எண்ணிடும்
நாயின் பிறப்பாக நானுமே ஆனேன் !
நினைவும் செயலுமே நேர்கோட்டில் வந்தால்
அனைத்துமே ஆகு(ம்) அழகு.

பனியில் இருப்பான் ! பளீர்ரெனத் தீயின்
நுனியா யிருப்பான் ! நுரைபோல் தனித்து
மறைபோல் மறைவான் ! மலைபோல் நிமிர்வான் !
பிறையை அணிந்த பிரான் !

வேண்டி யழைத்தாலும் வேண்டாது போனாலும்
ஆண்டி யவந்தா(ன்) அகத்திலே தூண்டி
விடுகிறான் தூய வினைகளை ! இன்பப்
படுகிறான் என்செயல் பார்த்து.

தொட்டு தினம்பூசை தொன்மையாய்ச் செய்தோற்கும்
கிட்ட வரவில்லை ; கீழ்சாதி தொட்டன்பால்
பூசைகள் செய்தவுடன் பூப்போன்ற உள்ளத்தில்
ஆசையாய் வந்தானே அன்று.

எடைக்கெடை யாகநாம் எத்தனை தந்தும்
கிடைக்காது ஈசன் கிருபை – விடையில்
அமர்ந்த சிவனை அகத்தில் அமர்த்த
நிமிர்ந்த நிலையே நிதம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““தூய நினைவே சிவன்”

  1. நினைவும் செயலுமே நேர்கோட்டில் வந்தால்
    அனைத்துமே ஆகு(ம்) அழகு.

    அருமை..!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *