கவிஜி

திரையை விரித்துக் கொண்டு
உள்ளே சென்று நடித்து விட்டு
விடிந்ததும் வெளியேறி
போகிறார்கள் நடிகர்கள்
என்று நினைத்த காலத்தில்
சினிமா சிலிர்த்தது…

ப்ரொஜெக்டரில் தலைகீழாய்
தெரிந்த காட்சிகளை
குனிந்து குனிந்து
பார்க்கையில் சினிமா
பிரமாண்டம்….

திரைக்குள் விழுந்த குத்துகளில்
வெளியே அடி வாங்கியதாக
உணர்ந்த
காலத்தில் புரியாத லாஜிக் அழகு…

ஒற்றைப் பொத்தானில்
நிறுத்தி விட்டு
‘போரா இருக்கு’ என்று
திரும்பி படுக்கையில்
பால்ய சினிமாவின் இடையே
கரண்ட் போனது போல
அத்தனை பெரிய கூச்சல்…

தூக்கமின்றி தவிக்கிறது
மன அரங்கம்….

கவிஜி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *