சமூகத்தின் பார்வையில் – மூன்றாம் பாலினம்

2

சு.காந்திமதி ஆராய்ச்சியாளர்
அரசியல் அறிவியல் மற்றும் நிர்வாக வளர்ச்சித் துறை
காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம்.
காந்திகிராம்

“கவுரமான பெயரில் கடவுளை அழைப்பவர்கள் தான் மிகக் கொச்சை மொழியில் திருநங்கைகளாக அழைக்கிறார்கள். கேவலப்படுத்துகிறார்கள். இவர்களின் வாழ்க்கை நுட்பமான உணர்வுநிலை சார்ந்தது. பிறந்தது முதல் ஆணாகவோ , பெண்ணாகவோ வளரும் பருவத்தில்தான் தாங்கள் உண்மையில் யார் என்பதை உணருகிறார்கள். மூன்றாம் பாலினத்தவரின் அன்றாட சமூகத்தில் என்ன என்ன பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்டுகின்றன என்பதைப் பற்றி நான் பார்த்த சிலவற்றை உங்களுக்கும் தெரியப்படுத்துகிறேன். அவர்கள் அன்றாட வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதைப் பற்றி சிலவற்றை பார்ப்போம். திருநங்கைகள், அரவாணிகள் என பலப் பெயர்கள் வைத்து கூறப்படுகின்றார்கள். இவர்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் என்று 15.04.2014 உச்சநீதிமன்றம் அங்கீகாரம் கொடுத்தது. இவர்களின் மக்கள் தொகை இந்தியாவில் 5 கோடியும் தமிழ்நாட்டில் 4,88 இலட்சம் பேர் உள்ளனர். 2011 கணக்கெடுப்பின்படி. இதில் தற்சமயம் மூன்றாம் இனத்தவரை சார்ந்த கிர்த்திகா பிரியதர்ஷினி சார்பு ஆய்வாளராக தற்சமயம் தேர்ச்சி பெற்றவர். தேர்ச்சி பெற்ற பொழுதிழும் கூட சார்பு ஆய்வாளர் பதவியில் அமர்வதற்குள் பல பிரச்சனைககளை சந்தித்து பதவியில் அமர்ந்துள்ளார். பதவியில் அமர்வதற்கு ஒவ்வொரு முறையும் நமது உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார். அவரின் கடின உழைப்பிற்கும். திறமைக்கும், உரிமைக்கும் கிடைத்த பரிசுதான் சார்பு ஆய்வாளர் பதவி. இவர் படிக்கும் பொழுதே பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரு சிலர் செய்யும் கேலி கிண்டலுக்கு மனவுளைச்சல் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இடையில் மூன்றாம் இனத்தவர்களுக்கென்று சமூகத்தில் பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், கோவில்கள் போன்ற இடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியாக கழிப்பறை வசதிகள் உள்ளன. ஆனால் மூன்றாம் இனத்தவர்களுக்கு கழிப்பறை வசதிகள் செய்து தரவில்லை. இரண்டாவதாக வீடு வாடகைக்கு கேட்டால் சாதாரணமான ஆட்களுக்கு மாத கட்டணமாக 2000 முதல் 3000 வரை வசூல் செய்கின்றனர். ஆனால் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என்றாலே 4000 முதல் 6000 வரை வசூல் செய்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களை விசித்திரமாகப் பார்க்கின்றனர். பொது இடங்களில் ஒரு சிலர் செய்யும் கேலி கிண்டலலால் மனவுளைச்சலுக்கு ஆளாகப்படுகின்றனர். ஒரு சிலர் செய்யும் பாலியல் செயலுக்கு ஒட்டு மொத்த மூன்றாம் இனச் சமுதாயத்திற்கே அவப் பெயர் வருகிறது. நம்முடைய சார்பு ஆய்வாளார் கிர்த்திகா பிரியதர்ஷினி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொது மக்களிடையே உள்ள கண்ணோட்டம் மாற வேண்டும். பொது மக்கள் மூலியமாக மூன்றாம் பாலினத்தவருக்கு விழிப்புணர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். குறிப்பாக சேரிப் பகுதியில் உள்ள மூன்றாம் இனத்தவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது மாற வேண்டும். இப்படி செய்தல் மட்டுமே நாம் அவர்களுக்குக் கொடுத்த அங்கீகாரம் சரியானவையாக அமையக்கூடும்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சமூகத்தின் பார்வையில் – மூன்றாம் பாலினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *