க. பாலசுப்பிரமணியன்

 

அணுவைத் துளைத்து ..

அதன் கருவைக் கிழித்து ..

அமைதியில் உறங்கும்… நான் !

காலமும் ஞாலமும் உரசிடக் ..
கதிராய்ப் பிறந்த கலைஞன் நான்!

கண்ணின் ஒளிக்குள்..
கைகளின் அசைவில் ..
உடலிடும் கதிராய்..
உயிரினுள் அன்பாய்,,..

நடந்திடப் …பறந்திட..
பாதைகள் வகுக்கும் பறவை .

நானிலம் தேடிடும் ..
நல்லவன்..வல்லவன்
நான் காந்தன் !

கால அளப்பில் ..
சிறைப்படவில்லை!
பிறப்பும் இறப்பும் ..
என்னை வரிப்பதில்லை !

கூட்டில் வாழும் உயிர்களுக்குள்
கூடி வாழ்ந்தாலும் ..
குறைகள் அறியா…
கூத்தன் நான் !

சக்தியும் சிவமும்
ஆடிடும் சாஸ்வத நடனம் !
அண்டங்கள் அனைத்தையும்
அணைத்திடும் ஆற்றல் !

புலனுக்குப் புரியா..
புலவர்கள் அறியா
கற்பனைச் சிகரம் ..
கடவுள் தத்துவம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *