— மலர்சபா.

மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை

ஆடுநர்ப் புகழ்தல்

krishna

கண்ணன் தன் தமையன் பலராமனோடும்
அழகிய வளையல்கள் அணிந்த நப்பின்னையோடும்
இடையர்குலச் சிறுமியருடனும் சேர்ந்து
குரவைக் கூத்தாடினான்.

அப்போது,
அப்பெண்டிர் சூடிய மலர்கள்
கட்டவிழ்ந்து கீழே வீழ்ந்தன.

நடனமாடும் போது
அப்பெண்களின் அழகிய வளைகள்
ஒலித்த சத்தங்கள்
இசைத்த தாளங்களுக்கு ஏற்ப,
தன் திருவடிகள் அசைய,
யசோதைப் பிராட்டி
பெருமையுற்று வியக்க
துவாரகையில் ஆடிய கூத்து
மிக்க பெருமையுடையது.

அது போலவே
இன்று இங்கு ஆடிய குரவைக்கூத்தும்
மிக்க பெருமையுடையது
என்று மாதரி கூறினாள்.

தோழியரே!
நாம் அனைவரும் இப்போது
கருடனை ஊர்தியாகக் கொண்ட திருமாலை
இக்குரவையின்
உள்வரியாகிய ஒரு பாட்டினால்
போற்றுவோம்! புகழ்வோம்!

 

 

 

 

 

 

 
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

 

படத்துக்கு நன்றி:  கூகுள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *