பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வுக் கூட்டம்
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்தோரை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். இறைவணக்கமாக அபிராமி அந்தாதி மாணவிகளால் பாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை செட்டியார் நிகழ்ச்சிக்குத் தலைமை தங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சார்ந்த தாமோதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அறிவியல் வித்தைகள் தொடர்பாக பெற்றோரிடம் பேசினார். கூட்டதில் தேசிய திறன் வழி தேர்வில் 4 மாணவர்கள் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவ, மாணவியர் விடுமறை எடுக்காமல் பள்ளிக்கு தொடர்ந்து வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்குப் பெற்றோர் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் திருக்குறளை இசையோடு நடனமாடும் நிகழ்ச்சி மாணவிகளால் நடத்தப்பட்டது.
1 ம் வகுப்பு மாணவ, மாணவியர் பஞ்சபூதம்,கண்டங்கள்,மகாத்மா காந்தி தொடர்பான பாடல்களை தங்கள் மழலை மொழியில் அழகாக பாடிக் காண்பித்தார்கள்,
1 ம் வகுப்பு திவ்ய ஸ்ரீ தன் சுத்தம் பற்றி ஆங்கிலத்தில் எடுத்துக் கூறினார்,
2 ம் வகுப்பு மாணவி தேவதர்சினி பாரதியார் பாடல் பாடினார்,
2 ம் வகுப்பு மாணவர் வெங்கடராமன் ஒற்றுமை உணர்வு தொடர்பாகவும்,
3 ம் வகுப்பு கீர்த்தியா திருமுருகாற்றுப்படை பாடலையும்,
3 ம் வகுப்பு ஜனஸ்ரீ ஜவஹர்லால் நேரு தொடர்பாக ஆங்கில உரையும்,
6 ம் வகுப்பு ரஞ்சித் தன்னம்பிக்கை கவிதையும்,
4 ம் வகுப்பு அஜய்பிரகாஷ் நேரம் தவறாமை தொடர்பாக உரையும்,
7 ம் வகுப்பு ராஜேஸ்வரி தேவராம் பாடலையும்,
8 ம் வகுப்பு தனம் வள்ளுவர் பற்றியும்,ஆகாஷ் குமார் மாணவரும்,சமுகத்தொண்டும் என்கிற தலைப்பில் உறையும் நிகழ்த்தினார்கள்.
முன்னாள் மாணவர் நடராஜனின் தந்தை ராமச்சந்திரன் பள்ளியில் தன் மகன் இது வரை பெற்ற அனைத்து சான்றிதழ்களையும் விரிவாக எடுத்துக் கூறினார்.
பெற்றோர்கள் உமா மகேஸ்வரி, மீனாள் , காந்தி, லெட்சுமி ஆகியோர் பள்ளியை பற்றிப் பேசினார்கள். ஆசிரியை வாசுகி, முத்து மீனாள் ஆசிரியர் ஸ்ரீதர், கருப்பையா ஆகியோர் மாணவர்கள் தொடர்பாகவும், பெற்றோர்கள் செய்ய வேண்டியது தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்கள்.ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் : IMJ -5748,5731 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சார்ந்த தாமோதரன்
பட விளக்கம் : IMJ – 5743 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Thanks & Regards,
L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
09786113160.
E-Mail : jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/