’’வெண்பாகவதம்’’….
————————————-
கூர்மாவதாரம்
——————–

d6a268dd-423c-4547-b53b-9d6ce5ad646b

’’துர்வாசர் இட்ட தொடையை எறிந்திட
கர்வாதி கத்தில் களிறின்மேல் -சர்வாதி
காரத்தால் பெற்ற கடுத்தமுனி சாபத்தின்
பாரத்தால் வானத்தோன் பாழ்’’….

’’சாப விமோசனத்தை, சாகரப் பாற்கடலை
மாபெரும் மந்தார மத்தினால், -நீபெருவாய்
வாசுகி தாம்பால் வளைத்துக் கடைந்திட;
வாசுதேவன் விண்ணுக்கு வாக்கு’’….

’’வாசுகி உச்சியை வானோர் பிடித்திழுக்க
ஆசு அசுரர் அதன்வாலில் -கோஷமிட
மந்தார வெற்பன்று மூழ்குதலைத் தாங்கிட
வந்தாராம் ஆமையாய் விஷ்ணு’’….

’’அப்போது பீறிட்ட ஆலகால நெஞ்சினை
துப்பாது உண்ணாது தொண்டையில் -எப்போதும்
கொண்டனன் சம்பு; கிளர்ந்த இலக்குமியைக்
கொண்டனன் கூர்மம் கரத்து’’….

’’தன்வந்த்ரி தந்த திருக்கண் அமுதருந்த
முன்வந்த தானவரை மோகினிப் -பெண்வந்து
ஆசையைக் காட்டியவர் மோசமுற, விண்ணோரை
ஈஷியிட்டார் விஷ்ணு இலை’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *