மீ.விசுவநாதன்

pt893

மகாவில்வம் ஒன்றெடுத்து எங்கள்
மகாதேவன் கால்களிலே வைக்க
மகாசெல்வப் பேரமைதி என்னுள்
மௌனமாக ஓங்கியதே ! தீமை
புகாமனத்துள் தீட்டேது என்று
புத்தொளியாய் மின்னியதே ! நீயென்
சகாவென்றே திரிசூலன் சேர்க்க
சாதிபேதத் தீதெல்லாம் போச்சே!
(06.03.2016)
(அரையடி வாய்பாடு: காய், காய், மா)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *