மீ.விசுவநாதன்

images

நண்பரெலாம் காணும் பேறு
நான்காண வில்லை என்னும்
எண்ணத்தை விட்டு விட்டேன் !
இருக்கின்ற நல்ல நூல்கள்
கண்திறக்கும் பண்பு கூட்டும்
காலத்தை வென்று நிற்கும்
வண்மைகளை பெற்று வந்து
வம்சத்தை வாழ்த்தும் என்பேன்!

பாரதியை நித்தம் கொஞ்சம்
படித்தாலே ஞானம் கூடும் !
ஈரடியாய் உள்ள அந்தத்
திருக்குறளைத் தொட்டு விட்டால்
பேரறிவைப் பெற்று உள்ளம்
பெரியதாக மாற்றங் காணும் !
சாரமிதைக் கண்டு விட்டேன்
சாகாத யோகம் பெற்றேன் !

(06.03.2016)
(அறுசீர் அரையடி வாய்ப்பாடு:
காய், மா, மா)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *