நண்பரெலாம் காணும் பேறு நான்காண வில்லை என்னும் எண்ணத்தை விட்டு விட்டேன் ! இருக்கின்ற நல்ல நூல்கள் கண்திறக்கும் பண்பு கூட்டும் காலத்தை வென்று நிற்கும் வண்மைகளை பெற்று வந்து வம்சத்தை வாழ்த்தும் என்பேன்!
பாரதியை நித்தம் கொஞ்சம் படித்தாலே ஞானம் கூடும் ! ஈரடியாய் உள்ள அந்தத் திருக்குறளைத் தொட்டு விட்டால் பேரறிவைப் பெற்று உள்ளம் பெரியதாக மாற்றங் காணும் ! சாரமிதைக் கண்டு விட்டேன் சாகாத யோகம் பெற்றேன் !
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.