கலைமாமணி” பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு எங்கள் கண்ணீரஞ்சலி!

0

-கவிஞர் காவிரிமைந்தன்

 

Anandan

 

“கலைமாமணி” பிலிம்நியூஸ் ஆனந்தன்…
திரைத்துறைத் தகவல்களின் கருவூலம்
விரல்நுனியில் தந்திட்ட பேரறிஞர்!
இவருடனே பழகுகின்ற நாட்களையே
தந்ததெல்லாம் நிச்சயமாய்ப் பாக்கியமே!!

தேனொழுகப் பேசுகின்ற பண்பாளர்
தினையளவும் கோபம்வரா ஓர்மனிதர்!
வயதுகளைக் கடந்தபடி வரவேற்பளிப்பார்!
சுயநலங்கள் இல்லாது வாழ்ந்தாரே!!

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்சார்ந்து
தமிழகத்தின் தலைநகரில் சிலையமைத்தோம்!
திருமகனின் பெயரில்பல விருதளித்தோம் – அதைத்
திராவிட மொழிகளுக்கு வழங்க வைத்தார்!!

அவர்தந்த அறிவுரையை அப்படியே ஏற்று
தெலுங்கு கன்னடம் மலையாள கவிஞர்களுக்குக்
கவியரசு கண்ணதாசன் விருதளித்த ஆண்டு 1994
முழுமையாய் ஒத்துழைப்பு நல்கினாரே!!

மக்கள் தொடர்பு அதிகாரி  என்னும் பதவி
உருவாக்கித் தந்தவரே மக்கள் திலகமன்றோ?
நாடோடி மன்னன் திரைப்படத்தில் – அதை முதன்
முதலாய் ஏற்றவரும் பிலிம்நியூஸ் ஆனந்தனே!

காலைமுதல் இரவுவரை ஓய்விலா உழைப்பு
பயன்கருதாப் பற்றுவைத்த திரைத்துறை உறவு
படம் எடுத்தவரே மறந்தபோதும் – தகவல்களை
பட்டென்று சொல்வாரே – இனி எவரோ??

வாழ்நாளின் பெரும்பகுதி இதற்காக வாழ்ந்துகாட்டி
வரலாறு படைத்தவர் இவரென்றால் மிகையில்லை!
சாதனைகள் படைத்த ”தமிழ்த்திரை வரலாறு” நூலினைத்
தன்வாழ்நாள் சாதனையாய் வழங்கியவர் புகழ்வாழ்க!!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *