சின்ன தாக வீடு கட்டி
சிறப்புடனே வாழ்வ தற்கும்
முன்ன தாக தான தர்மம்
கொஞ்சமேனும் செய்ய வேண்டும் !
தன்ன தான பொருள்க ளேதும்
தனக்கென்று கிடையா தென்னும்
உன்ன தமான எண்ணம் வந்தால்
உலகமெலாம் நமது வீடே !
ஓட்டு வீடு தங்கக் கூரை,
ஒருவேளை நல்ல தூக்கம்,
பாட்டி னாலே இன்பங் கொண்டு
பசிமறக்கும் அன்பு நட்பு,
கூட்ட மாகச் சேர்ந்து வாழ்தல்
கொற்றவனை வெல்லு மென்பேன் !
வாட்ட மேதும் கொள்ள வேண்டாம்
வருவதெல்லாம் இறைவன் சொத்து !
(03.04.2016)
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.