மீ.விசுவநாதன்

சின்ன தாக வீடு கட்டி
சிறப்புடனே வாழ்வ தற்கும்
முன்ன தாக தான தர்மம்
கொஞ்சமேனும் செய்ய வேண்டும் !
தன்ன தான பொருள்க ளேதும்
தனக்கென்று கிடையா தென்னும்
உன்ன தமான எண்ணம் வந்தால்
உலகமெலாம் நமது வீடே !

ஓட்டு வீடு தங்கக் கூரை,
ஒருவேளை நல்ல தூக்கம்,
பாட்டி னாலே இன்பங் கொண்டு
பசிமறக்கும் அன்பு நட்பு,
கூட்ட மாகச் சேர்ந்து வாழ்தல்
கொற்றவனை வெல்லு மென்பேன் !
வாட்ட மேதும் கொள்ள வேண்டாம்
வருவதெல்லாம் இறைவன் சொத்து !
(03.04.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *