மீ.விசுவநாதன்

pradosha-moorthi
அந்திப் பொழுதில் அருமைத் தமிழில் அரந்தனையே
சிந்தித் திருந்தால் சிதையா மனத்தைச் செதுக்கிடலாம் !
நந்தி மறையை நமது செவியுள் நகர்த்துவதை
மந்தி ரமாக மதித்தே துதித்தல் மகத்துவமே !

மெய்யாம் தவத்தை மெதுவாய்க் கலைத்த ஒருவனது
மெய்யை எரித்து விபூதி யளித்த சிவபெருமான்
மெய்யே எனநான் மிகவும் விரும்பித் தொழுவதற்குப்
பொய்யாம் உடம்பு புரியும் உதவி புகழுடம்பே!

(கட்டளைக் கலித்துறை)
(பிரதோஷ தினம் : 05.04..2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *