— க.பிரகாஷ்.

21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் சாதனமாகக் கணினியில் நூல்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் பணி உலகெங்கிலும் எல்லா மொழிகளிலும் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் மொழி இலக்கியம், இலக்கணம், உள்ளிட்ட நூல்களைக் கணினியில் சேமித்து வைக்கும் வேலை அரசாலும், அரசு சார்புடைய அமைப்புகளாலும், தனியார் பலரின் ஆர்வத்தாலும் நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் பெரும்பங்காற்றியுள்ளது. சென்னை பல்கலைக்கழகமும் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் வேலையைத் தொடங்கி வருகின்றனர்.

கே.கல்யாணசுந்தரம் என்பவர் தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் வேலையை 1988 ஆம் ஆண்டு தொடங்கினார். இது தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் முதல் பணியாகக் கருதப்படுகிறது. இவர் தொடங்கிய திட்டத்திற்கு மதுரைத் திட்டம் என்று பெயர் வந்தது.

நூலக திட்டங்களை அமைத்து அனைத்து நூலகங்களிலும் மின்னூல் பணியை ஆரம்பித்தனர். இதுவே நூலக திட்டம் என்று குறிப்பிடுகின்றார்.

தமிழக அரசாங்கம் தமிழகத்தில் உள்ள கன்னிமார நூலகம் தேவநேயப் பாவாணர் நூலகம், தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், தமிழ் பல்கலைக்கழக நூலகம், கும்பகோணத்தில் உள்ள அரசினர் கலைக் கல்லூரி நூலகம், போன்ற புகழ் மிக்கதும் பழமையானதுமான நூலகங்களைக் கணினிமயமாக்கி பாதுகாத்து வருகிறது.

மேற்கூறிய பணிகளில் சில நூல்களை முழுவதுமாக படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சில நூல்களின் பட்டியலைப் பார்வையிடும் வகையில் அமைந்து காணப்படுகின்றன.

இங்ஙனம் தமிழ் நூல்களைக் கணினியில் சேமித்து இணையப் பயன்பாட்டின் மூலமாக எவரும் எங்கிருந்தும் பார்க்கும் வகையில் நூலகமாக அமைத்திடும் முறையையே மின் நூலகம் என்று குறிப்பிடப்படுகின்றன.

மின் நூலகங்கள்:

virtual_library_web
• எண்ணிம நூலகம் – (Digital Library)
• தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின் நூலகம் – (Tamil Virtual University E – Library)
• ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – (Roja Muthiah Resarch Library)
• சென்னை மின் நூலகம் – (Chinnai Library)
• நூலகம்.நெட் – (Noolaham.net)
• இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் – (Central Institute of Indian Languages – (CIIL)

மதுரைத் திட்டம், மின்பதிப்புத் திட்டம்:
உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம் வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யப் பெற்றுள்ளன.

ஒரு சமூகத்திற்கு இலக்கியங்கள்தான் கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துகாட்டு ஆகும். உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருகும் பகிர்ந்துகொண்டு பின் வரும் சந்ததியினருக்குக் கொண்டுச் செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை ஆகும்.

மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்கம் அல்லது தனியார் நிறுவன உதவியின்றி, வியபார நோக்க மின்றியும் நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி ஆகும். 1998 ஆம் ஆண்டு தமிழர் பொங்கல் திருநாள் அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்க வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களுக்கும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் கணினியைக் கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்ட பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிர்ந்து கொள்வதில் பங்கு பெறச்செயகின்றனர்.

மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை, தமிழ் எழுத்துக்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால்1999 ஆம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றதிற்கான இணையம் வழி தீர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிட்டு வருகின்றது. 2003 ஆம் ஆண்டில் இருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ் இலக்கியங்களின் வரலாறு மிக பழமையானது. முதற்சங்க கால நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து.

மதுரைத் திட்டம் காலம், சமயம், தேசப்பிரிவு, இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புகளை வெளியிட்டு வருகின்றது. தொன்றுதொட்டு சங்ககால நூல்கள் முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப் படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்கள் காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது ஆகும். காப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம்.

உலக மின்னூலகம்:
உலக மின்னூலகம் என்பது யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க காங்கிரசு நூலகம் ஆகியவற்றால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு மின்னூலகம் ஆகும். அனைத்துலக மற்றும் பல்வேறு கலாசாரப் புரிதல்களை ஊக்குவித்தல், இணையத்தில் கிடைக்கும் கலாசார உள்ளடக்கங்கள் அளவிலும், வகையிலும், அதிகமாக்குதல், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், ஆகியோருக்கு அறிவுசார் வளங்களை அளித்தல், பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் அறிவுசார் வளங்களை அதிகாpத்தல் அதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு இடையே உள்ள எண்ம இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை தனது நோக்கமாக உலக மின்னூலகம் கொண்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள கலாசாரங்களின் முதன்மைத் தகவல் ஆதாரங்களான வரைப்படங்கள் அரிய நூல்கள் இசைக் கோர்வைகள் திரைப்படங்கள், அச்சுவடிவங்கள், ஒளிப்படங்கள், வடிவியல், வரைபடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக இணையத்தில் கிடைக்கச் செய்வதில் முனைப்புடன் செயல்படுகிறது.

உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது அரபி, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, போர்ச்சுகிசு, ரஷ்யன், ஆகிய மொழிகளில் கிடைத்த 1170 உருப்படிகளைக் கொண்டிருந்தது.

வரலாறு:
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2003 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் கலாசார அமைப்புக்கான யுனெஸ்கோ தனது நிலையான பிரதிநிதிக் குழுவை ஐக்கிய அமெரிக்கா மீள அமைத்தது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் நூலகர் முனைவர் ஜேம்சு.எச்.பில்லிங்டன், அந்நாட்டின் ஆணையாளராக யுனெஸ்கோவில் நியமிக்கப்பட்டார்.

“ஜூன் 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ துவக்க நாள் கருத்தரங்கில் அழைப்பின் பேரில் சென்று உலக மின்னூலகம் ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார்.”5 அப்போது நிறுவனங்கள் நூலகங்கள் அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ள அரிய உள்ளடக்கங்களை எளிதில் அணுகி இலவசமாகப் பெறக்கூடிய வகையில் புதிய வடிவில் திரும்ப இந்த உலகிற்கு அளிக்கத் தகுந்த அமைப்பாக உலக மின்னூலகம் செயல்பட வேண்டும் என்று விளக்கினார்.

அரசு தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட உலக மின்னூலகத்தில் 2005 ஆம் ஆண்டு கூகுள் நிறுவணம் உதவியாக இருந்தது.

பணிக் குழுக்கள்:
பில்லிங்டன் தொலை நோக்கை நிறை வேற்ற ஒரு செயற் திட்டத்தைக் காங்கிரசு நூலகத்தில் உள்ள உலக மின்னூலக முது நிலை ஆலோசகர் முனைவர் ஜான் வான் ஔடென்ரேன் 2006 ஆம் ஆண்டு கருத்தரங்கில் வழங்கினார்.

உலக மின்னூலகமானது தனது பங்குதாரர்களை முதன்மையான நான்கு திட்டப்பணிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
அவை:
• தொழில் நுட்ப கட்டமைப்பு
• தேர்வு செய்தல்
• நிர்வகித்தல்
• நிதியளித்தல்

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைப்பெற்ற உலக மின்னூலக வளர்ச்சி குறித்த மாநாட்டில் இக்குறிக்கோள் வடிவமைக்கப்பட்டது. நான்கு திட்டப் பணிகளில் உள்ள தனிப்பட்ட சிக்கல்களை ஆராய தனித்தனியான பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

2007 ஆம் ஆண்டு முதற்பகுதியில் ஒன்று கூடி மின்னூலகத் துறையில் உள்ள தொழில் வல்லுநர்களையும் சேர்த்து கொண்டது.

ஒவ்வொரு நாடுகளில் இருந்து பணிக்குழுவினருக்கு உதவி செய்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு உலக மின்னூலகம் தொடங்கப்பட்டது.

காட்சிப்படுத்தல்:
உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது பல்வேறு காட்சிப்படுத்துதல்கள் சேர்க்கப்பட்டன.
அவை:
• செஞ்யின் கதை
• 11 ஆம் நூற்றாண்டு ஜப்பான் கதை
• உலகில் முதன் முறையாக எழுதப்பட்ட புதினம்
• குழந்தை ஏசுவின் முதல் அசுடெக் குறிப்புகள்
• அல்ஜீப்ரா கணித வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த அரபு மொழி நூல்கள்.
• எட்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆப்பிhpக்கா ஒவியமான ரத்தம் சிந்தும் மான்.
• அமெரிக்கா சென்று முதன் முறையாக குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட வால்டுசீமுல்லர் வரைப்படம்.
• மொழியில் பெயர்க்கப்பட்ட விவிலியம் ருசிய குருவால் அலுசியன்.
• மாலி நாட்டில் கிடைத்த இசுலாமிய கையெழுத்துப் பிரதி.
• லுமியர் சகோதரர்கள் உருவாக்கிய உலகின் முதல் திரைப்படம்
• இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வெட்டு ஒளிப்படம்

இது போன்று பல்வேறு நூல்களை உலக மின்னூல்கள் துவங்கப்பட்ட போது காட்சிப்படுத்தலின் போது சேர்க்ப்பட்டுள்ளன.

தமிழ் இணையப் பல்கலைக் கழக நூலகம் – (Tamil Virtual University E – Library):
உலகம் தழுவி வாழும் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் பயில விரும்பும் மாணவர்கள் முதலியோர் படித்துப் பயன்பெறும் வகையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின்நூலகம் ஒன்றை அமைந்துள்ளது. தொல்காப்பியம் முதற்கொண்டு இக்கால இலக்கியம் வரையிலான 250 க்கும் மேற்பட்ட ஏறக்குறைய 1,00,000 பக்கங்களுக்கு மேல் இம்மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

தமிழ் இணையப் பல்கலைக் கழக மின் நூலகத்தில் உள்ள நூல்களை உலகில் எவரும் எங்கிருந்தும் எப்பொழுதும் இணைய வழியாகப் படித்தப் பயன் பெறலாம். ஓர் நூலை ஒரே நேரத்தில் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் படித்தப் பயன பெறலாம். ஒருவர் வழக்கமான நூலகத்திற்குச் சென்று தமக்குத் தேவையான நூல்களைத் தேடிப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் நீங்குகின்றன.

“அவசரமான உலகத்தின் அவசரம் கருதி காலம் பொன்னானது என்ற பொன்மொழியை மனத்தில் கொண்டு படிப்பவர்களின் நேர விரியத்தைத் தவிர்க்கும் வகையில் இந்நூலகம் அமைக்கப்படுகின்றது.” அரிய வசதிகள் கொண்ட இம்மின் நூலகத்தை விரும்புகின்ற அனைவரும் தற்பொழுது கட்டணம் ஏது மின்றி முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இம்மின் நூலகமானது இலக்கண, இலக்கிய நூல்கள் உரோமன் வரி வடிவத்தமிழ் நூல்கள், அகராதிகள், கலைச்சொல், தொகுப்புகள், ஒளிக்காட்சித் தொகுப்புகள் என்ற வகையில் பகுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நூலகத்தில் நூல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் ஆனால், இம்மின் நூலகத்தில் தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் பண்பாட்டு நிகழ்ச்சிகளும், தமிழர்களின் இறை உணர்வைப் புலப்படுத்துகின்ற சைவ, வைணவக் கோயில்களின் ஒலி, ஒளிக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தமிழர்களின் சமயப் பொறைக்கு எடுத்துக்காட்டாக இம்மின் நூலகத்தில் இசுலாமிய மற்றும் கிறித்துவ ஆலயங்களின் ஒலி, ஒளிக்காட்சிகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள்ளடக்க மின்னூல்கள்:
தமிழ் இணைய பல்கலைக் கழக மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ள நூல்கள் இலக்கண நூல்கள், சங்க இலக்கியம், பதினெண் கீழ்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், திரட்டு, நூல்கள், நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்கள் உரைநடை, நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்னும் வகைப்பாட்டு முறைமையில் பகுத்தமைக்கப்பட்டுள்ளன.

இலக்கண நூல்கள்:
• தொல்காப்பியம்
• புறப்பொருள் வெண்பாமாலை
• யாப்பருங்கலம்
• யாப்பருங்கலக்காரிகை
• தண்டியலங்காரம்
• நன்னூல்
• நம்பியகப் பொருள்
• தொன்னூல் விளக்கம்
• இலக்கண விளக்கம்
• தமிழ் நெறி விளக்கம்
• சிதம்பரப்பாட்டியல்
• நவநீதப்பாட்டியல்
• வீரசோழியம்
• தமிழ் நூல்
• முத்துவீரியம்
• சுவாமிநாதம்
• நேமிநாதம்
• அறுவகை இலக்கணம்
இவை அனைத்து இலக்கண நூல்களுக்கு உரையுடன் அமைந்துள்ளன.

இலக்கிய நூல்கள்:
தமிழ் இணைய பல்கலைக் கழக நூலகத்தில் 52 இலக்கிய நூல்கள் உரையுடன் இடம் பெற்றுள்ளன.
• சங்கஇலக்கியம்
• பதினெண்கீழ்க்கணக்கு
• ஐம்பெங்ருகாப்பியங்கள்
• ஐஞ்சிறுகாப்பியங்கள்
• பெருங்கதை
• கம்பராமாயணம்
• வில்லிபாரதம்
• அரிச்சந்திர புராணம்
• காஞ்சிப் புராணம்

சமய இலக்கியங்கள்:
சமய இலக்கிய நூல்கள் சைவம், வைணவம், கிறித்துவம், இசுலாமியம் என்ற வரிசையில் அமைந்துள்ளன.

சைவம் –
• பன்னிரு திருமுறைகள்
• திருவிளையாடற் புராணம்
• கந்தபுராணம்
• கல்லாடம்
• மெய்கண்டசாத்திரங்கள்
• திருமுறைத் தலங்கள்

வைணவம் –
• நாலாயிர திவ்யபிரபந்தம்
• 108 வைணவ திவ்யதேச ஸ்தலவரலாறு

கிறுத்துவம் –
• தேம்பாவணி
• இரட்சணிய யாத்திரிகம்
• திரு அவதாரம்
• இயேசு காவியம்
• இரட்சணிய மனோகரம்

இசுலாம் –
• சீறாப்புராணம்
• நெஞ்சில் நிறைந்த நபிமணி
• நாயகம் எங்கள் தாயகம்
• யூசுப் ஜீலைகா
• நாயகம் ஒரு காவியம்

சிற்றிலக்கியங்கள்:
• கலம்பகம்-கச்சிக்கலம்பகம்
• உலா-மூவருலா
• தூது-அழகர் வீடுதூது
-தமிழ்வீடுதூது
• கோவை – தஞ்சைவாணன் கோவை
• பிள்ளைத்தமிழ்-சேக்கிழார்ப் பிள்ளைத் தமிழ்
-திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
-மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
• பரணிஇரணியவதைப் பரணி
-கலிங்கத்துப்பரணி
• அந்தாதி – அபிராமி அந்தாதி
-திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
• சதகம் – தண்டலையார் சதகம்
-அறப்பளீசுர சதகம்
-குமரேச சதகம்
-கொங்கு மண்டல சதகங்கள்
• வெண்பா – நள வெண்பா
• குறவஞ்சி – திருக்குற்றாலக் குறவஞ்சி
-தியாகேசர் குறவஞ்சி
• பிரபந்தம் – அஷ்டபிரபந்தம்
• ஆற்றுப்படை – புலவராற்றுப்படை

திரட்டு நூல்கள்:
குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு 12 நூல்களும், சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு 24 நூல்களும், இராமலிங்க அடிகளின் திருவருட்பா, தாயுமானவரின் தனிப்பாடல்கள் உள்ளிட்ட 38 நூல்கள் உரையுடன் அமைக்கப்பட்டுள்ளன.

நெறி நூல்கள்:
மனிதர்களை நெறிப்படுத்தும்நோக்கில் நெறிநூல்கள் உருவாக்கியுள்ளார். அவ்வகை நுல்கள்
• ஆத்திசூடி
• கொன்றை வேந்தன்
• மூதுரை
• நல்வழி
• வெற்றிவேற்கை
• உலகநீதி
• நீதி நெறி விளக்கம்
• அறநெறிச்காரம்
• நீதிநூல்
• சித்தர் இலக்கியங்கள்

இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் கவிதை:
• பாரதியார்
• பாரதிதாசன்
• வேதநாயகம்பிள்ளையின் பெண்மதி மாலை
• கவிஞர் முடியரசனின் பூங்கொடி
• தமிழ் ஒளி கவிதை

இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் உரைநடை:
சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, என்ற முறையில் நூல்களை அமைத்துள்ளது.
• சிறுகதை – பாரதியார்கதைகள்
• புதினம் – அகல் விளக்கு (மு.வ)
-சமுதாய வீதி (நா.பார்த்தசாரதி)
-வேங்கையின் மைந்தன் (அகிலன்)
• நாடகம் – மனோன்மணீயம்
• கட்டுரை – புத்தர் அருளிய தம்மபதம்
• திறனாய்வு – அறமும் அரசியலும் (மு.வ)
-இலக்கிய ஆராய்ச்சி (மு.வ.)
-தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் (மயிலை சீனி.வேங்கடசாமி)
-பதினெண் கீழ்கணக்கும் தமிழர் வாழ்வும் (சாமி.சிதம்பரனார்)
-பாரதியார் கட்டுரைகள்
-பாவாணர் படைப்புகள் (30 நூல்கள்)

வரலாறு:
மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, வாழ்க்கை வரலாறு, நாட்டு வரலாறு, நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள், என பல இலக்கிய நூல்கள் அமைந்துள்ளன.

மொழி வரலாறு:
தமிழ் மொழிவரலாறு (தொ.பொ.மீ)

இலக்கியவரலாறு:
• சமணமும் தமிழும் (மயிலை சீனி.வேங்கடசாமி)
• தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ.)
• பௌத்தமம் தமிழும் (மயிலை சீனி.வேங்கடசாமி)
• விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு (மா.பொ.சி)

வாழ்க்கை வரலாறு:
• என்சரித்திரம் (உ.வே.சா)

நாட்டுவரலாறு:
• குடியாட்சி (அப்பாதுரை)
• தமிழகம் (கா.அப்பாதுரை)
• தமிழ் இந்தியா (ந.சி.கந்தையாபிள்ளை)
• தொண்டு (கா.அப்பாதுரை)

நாட்டுப்புற இலக்கியங்கள்:
• தமிழர் நாட்டுப் பாடல்கள் (நா.வானமாமலை)
• மலையருவி (கி.வா.ஜகநாதன்)
• முத்துப்பட்டன் கதைப்பாடல் (நா.வானமாமலை)

சிறுவர் இலக்கியங்கள்:
• வாண்டுமாமா படைப்புகள் (கதைகதையாம் காரணமாம்)

உரோமன் வரிவடிவ நூல்கள்:
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்கள் முழுமையாக உரோமன் வரி வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

அகராதிகள்:
தமிழ் இணைய பல்க்கலைக்கழக மின் நூலகத்தில் இலக்கண, இலக்கிய நூல்களேயன்றிச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் – தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி, மு.சண்முகம்பிள்ளையின் தமிழ் – தமிழ் அகரமுதல் ஆகிய நான்கு அகராதிகள் இடம் பெற்றுள்ளன. சொற்களுக்கான பொருளை அகர வரிசை முறையிலும், வேண்டிய சொற்களுக்கான பொருளைத் தேடிப் பெறும் வகையிலும், அச்சுவடிவ அகராதியைப் பார்ப்பதைப் போலவே பக்கம் பக்கமாகப் பார்க்கும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கலைச்சொற்கள்:
சமுதாயவியல், கலை மானிடவியல், அறிவியல், மருத்துவவியல், தகவல் தொழில் நூட்பவியல், சட்டவியல், கால்நடை மருத்துவவியல், பொறியியல் தொழில் நுட்பவியல், மனைஇயல், உயிரியத் தொழில் நுட்பவியல், வேளான்மைப் பொறியியல் ஆகிய துறைகளைச் சார்ந்த அளவுகடந்த கலைச்சொற்கள் இந்நூலகத்தில் அடங்கியுள்ளது.

சுவடிக் காட்சியகம்:
ஓலைச்சுவடிகள் உள்ள தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்கும் வகையிலும் இம்மின்னூலகம் பணியாற்றி வருகிறது. ஓலைச் சுவடிகளைஒளிப்பட நகல் எடுத்துப் பாதுகாத்து வருகிறது. ஓலைச்சுவடிகள் மட்டுமன்றிச் சில அரிய காகிதச் சுவடிகளையும் பாதுகாத்து வைப்பதோடு அவற்றை இணையம் வழியாகக் காட்சிக்கும் அளிக்கிறது. அவ்வகையில் கீழ்க்காணும் ஓலைச்சுவடிகள் காணக்கிடைக்கின்றன.

பண்பாட்டுக் காட்சியகம்:
தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பின்வரும் பகுதிகள் அமைந்துள்ளன. ஒவ்வொன்று பற்றியும் சுருக்கமான விளக்கம், படக்காட்சிகள், ஒலி ஒளிக் காட்சிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தலங்கள்:
• 14 சமணத்தலங்கள்
• 101 சைவத்தலங்கள்
• 93 வைணவத்தலங்கள்
• 9 இசுலாமியத் தலங்கள்
• 13 கிறித்துவத் தலங்கள்

திருவிழாக்கள்:
• 7 தேர் திருவிழாக்கள்
• 8 பல்வேறு விழாக்கள்

கலைகள்-16 வகையான கலைகள்
வரலாற்றுச் சின்னங்கள் – 3 சின்னங்கள்
விளையாட்டுகள்-5 வகையான விளையாட்டுகள்

தமிழ் மொழியில் இன்று பரவலாக இருக்கும் நூல்களை அனைத்தும் மின்னூலாக மாற்றி வருகின்றனர். மின்னூல்களை ஒரு கட்டமைப்பாக வைப்பதற்கு மின்னூலகங்கள் உருவாக்கினர். அந்நூலகத்தின் மூலமாக பல மின்னூல்களை வெளியிட்டு வருகின்றனர். இனி வரும் காலங்களில் கட்டமைக்கப்பட்ட புத்தகங்களைப் படிப்பதைத் தவிர்த்து விட்டு மின்னூல் படிக்கும் முறை அதிகமாக வளர்ந்து வருகின்றன.

_________________________________________

பார்வை நூல்கள்:
• http://ta.wikipedia.org/s/w97
• http://ta.wikipedia.org/s/94p
• இணையமும் இனிய தமிழும் – க.துரையரசன்

_________________________________________

க.பிரகாஷ்
தமிழ்த்துறை
தொழில் நுட்ப கள ஆய்வு பணியாளர்
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46

_________________________________________

படம் உதவி: https://www.nsf.gov/news/news_summ.jsp?cntn_id=110947

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *