-மீ.விசுவநாதன்

ஆசையாரை விட்டது – அது
–அரசனை ஆண்டி யாக்குது!
காசைநேரே கண்டதும் – அது
–களவினைச் செய்யச் சொல்லுது!

நாக்கில்பொய் வைக்குது – மொத்த
–நாட்டினை ஆளத் துடிக்குது!
வாக்கில்மொய் தடவுது – மக்கள்
–வாயினை நன்றா யடைக்குது!

மானமுள்ள தொண்டென – அன்று
–மண்ணினைக் காக்க வந்தனர்!
ஆனவரை சுருட்டவே -இன்று
–ஆர்வமாய்க் கட்சி சேர்ந்தனர்!

தோற்றத்தில் மயங்கியே – புத்தி
–தொலைவதைக் கொஞ்சம் திருத்துவோம்!
மாற்றத்தை வழங்கிட – தூய
–மனிதரை நெஞ்சம் நிறுத்துவோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *