-மீ.விசுவநாதன்

வழிபா டென்பது வலியை மறக்கவும்,
அழியும் இந்த ஐம்பூத உடலுக்குள்
அழியா திருக்கும் ஆத்மனை எந்த
மொழியும் இன்றியே மௌனத்தில்
உணர்ந்தே உருகி உருகிக் கரைந்து
கணமெலாம் முக்தனாய்க் கவலைகள் துறக்கவும்,
மழலையும் பாம்பும் மாமழை வெள்ளமும்
குழலது இசையும் கூத்தும் கத்தலும்
ஒருதுளி விடமும் உளம்மகிழ் விருந்தும்
ஒருவனாம் அந்த உத்தமன் ஒளியென
நினைக்கும் பக்குவம் நெஞ்சில்
தினைத்துளி வரவும் வேண்டுறப் பண்பே!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *