வாழ்த்து

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த துன்முகி புத்தாண்டு அனைவருக்கும் சகல வளங்களும், நலங்களும் அருள வாழ்த்துகள். இந்த புத்தாண்டு தினத்தில் அவரவர்களும் தங்கள் குடும்பப் பாரம்பரிய வழக்கப்படி வழிபாடு செய்வார்கள்.

நம் முன்னோர்கள் தமிழ் மாதப் பிறப்பு என்பதை கதிரோனின் இயக்கத்தைக் கொண்டே கணித்துள்ளார்கள் அதாவது பனிரெண்டு ராசிகளில் முதல் ராசியான மேச ராசியில் சூரியன் தன் பயணத்தின் அடியெடுத்து வைக்கின்ற திருநாளே தமிழ்ப் புத்தாண்டின் முத்தான முதல் நாளாக அமைத்துள்ளனர். இந்நந்நாளில் காலை கண்மலரும் தருணம் ஒரு தூய்மையான தட்டில் பலவகையான பழங்கள், பணம், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து அதில் விழிப்பது வழமை. இப்படி செய்வதால் சகல செல்வங்களும் பெருகுவதாகவும் நம்பிக்கை பெரும்பாலான குடும்பங்களில் இருப்பதைக் காணமுடிகிறது. புத்தாண்டுக் காலையில் திருக்கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கிற பழக்கமும் கடைப் பிடிக்கப்படுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *