சித்திரைப்பெண்ணே வருக!
-சரஸ்வதி ராசேந்திரன்
சித்திரைப் பெண்ணே வருக
சித்தம் மகிழ்ந்திட அருள்தருக
துன்முகி வருடமே வருக
துன்பங்கள் தீர்த்திட அருள்க
உயிர்கள் உயிர்த்திட வருக
பயிர்கள் செழித்திட மழைதருக
வறுமையை ஓட்டி அருள்க
குறுகிய எண்ணம் தீர்க்க வருக
பருவம் தவறாமல் மழை தந்து
உருவாக்கி ஏற்றம் தருக உலகுக்கு
வசந்த காலமே வருக
இசைந்து இன்பம் தருக
அளவாய் மழை வெயில் தந்து
வளமாய் நாட்டை ஆக்குக
இளவேனில் காலமே வருக
இளநீர்போல் சுவை தருக!