-சரஸ்வதி ராசேந்திரன்

சித்திரைப்  பெண்ணே வருக
சித்தம் மகிழ்ந்திட அருள்தருக
துன்முகி  வருடமே  வருக                    newyear1
துன்பங்கள்  தீர்த்திட  அருள்க
உயிர்கள்  உயிர்த்திட  வருக
பயிர்கள் செழித்திட மழைதருக
வறுமையை  ஓட்டி  அருள்க
குறுகிய  எண்ணம் தீர்க்க வருக
பருவம் தவறாமல் மழை தந்து
உருவாக்கி  ஏற்றம் தருக உலகுக்கு
வசந்த  காலமே   வருக
இசைந்து  இன்பம் தருக
அளவாய் மழை வெயில் தந்து
வளமாய்  நாட்டை ஆக்குக
இளவேனில் காலமே வருக
இளநீர்போல் சுவை தருக!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *