ஸ்ரீ இராமர் திருப் புகழ்….
‘ஏறு மயிலேறி விளையாடு முகமொன்று’ திருப்புகழ் மெட்டில்….
“கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்று
தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று
கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று
கோரமகள் தாடகையை கொன்றமுகம் ஒன்று
ஈசன்சிலை யாகசிலை இற்றமுகம் ஒன்று
வாசமகள் ஜானகியின் ஆசைமுகம் ஒன்று
ஆசுகவி மாருதியின் நட்புமுகம் ஒன்று
ஆதிகவி ஒதுமிதி காசபெரு மாளே”….கிரேசி மோகன்….
ஈசன்சிலையாக-ஈசன் அரண்டுபோய் சிலையாக சமைந்திட அவரது ‘’சிலையை’’(சிவ தனுசு-வில்) வளைத்த முகம் ஒன்று….