சட்டத்தின் உரிமை மீறல்
— சு.காந்திமதி.
சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்று நாம் அனைவரும் கூறுகிறோம். அது மட்டும் அல்ல மதம், இனம், மொழி, தேசியம், மற்றும் பாலியல் ரீதியாக எந்தவொரு பாகுபாடின்றி அனைவருக்கும் எல்லா இடங்களிலும் மனித உரிமை கிடைக்கப் பெற சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தனி மனிதர் ஒருவருக்குப் பிரச்சனை என வந்தால் நாம் எல்லோரும் விலகி ஓடுகிறோம். வீட்டில் நிம்மதியாகக் கூட உறங்க முடிவதில்லை.
பொதுவாகக் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் திருவிழாக்கள் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் சூழ்நிலை தவறி சண்டை சச்சரவுகள் வந்து விடுகின்றது. இதில் சிலரது கோபத்தினாலும் சூழ்ச்சியினாலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்படப் பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இதில் எந்தத் தவறும் செய்யாத அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சண்டை சச்சரவுகளில் ஈடுபடாத அப்பாவிகள் வீட்டில் இருந்தாலும் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடாத அப்பாவி பொது மக்களையும் பிரச்சனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும் சூழ்நிலையும் அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிடுகிறது. சூழ்நிலையும், அக்கம் பக்கத்தினர் கூறுவதையும் மதிக்காமல் சம்பந்தம் இல்லாத அப்பாவி பொது மக்கள் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். இதனால் பொது மக்கள் அதிக மன உளைச்சலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது சட்டத்தின் உரிமை மீறல் தானே!
____________________________________________
சு.காந்திமதி
ஆராய்ச்சியாளர்
அரசியல் அறிவியல் மற்றும் நிர்வாக வளர்ச்சித் துறை
காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம், காந்திகிராமம்
காவல் துறை தன் மதிப்பை இழந்து கோண்டு வருகிறது. தீற விசாரிக்காமல் எடுக்கும்”நடவடிக்கை எடுப்பதால்..