கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
அற்புதம் கேசவ்….பஞ்ச புலன்கள் பஞ்சாய்ப் பறக்க ஈருடல் ஓருயிராய் கறவை-கிருஷ்ணர் இணைந்து புரியும் கெளரவமான குரு ஷேத்திரம்….சபாஷ் கேசவ்….
KRISHNA FOR TODAY….
—————————————-
“ஆள்பாதி ஆனதால் ‘ஆ’ பாதி ஆனது,
தோள்வழி தேடல் திருவடி : -வாள்விழி
ராதையாய் மாறியது, ரங்கன்தோள் ஏறியது
கீதைவாத் ஸல்யம் கறப்பு”….
“”காரிருள், வெண்நிலவாய் கண்ணன் பசுவோடு
ஈருடல் ஓருயிராய் இன்பமாய், -வேறுலகில்
மானஸஸஞ் சாரம் மனதை மயக்குது
நானசைவு இல்லாத நட்பு”….
“பசுவுக்கும் கண்ணன் பகவான், பறக்கும்
கொசுவுக்கும் கண்ணன் கடவுள், -விசுவத்தில்
நாம்பசு ஆனாலும், நாம்கொசு ஆனாலும்
CALMசிசு வாயவன்கை குந்து”….கிரேசி மோகன்….
“இருக்கானால் இல்லை இறையும் ,இரையும்
கருப்பிலே வெள்ளை கலப்பு: -இருப்பதன்(Delight of Existence)
தாத்பர்யம் என்னவென்றால் தானாய் இருத்தலென்றான்
வாத்சல்ய பாக வதன்” …. கிரேசி மோகன்….