கீதாஞ்சலி கவிஞருக்கு ஒரு நினைவாஞ்சலி (7 மே 1861)

0

 

க. பாலசுப்பிரமணியன்

thahoor_2272119a

வங்கத்தில் பிறந்த தங்கமொன்று
சிங்கமென உருவெடுத்து வந்தது…
அங்கமெல்லாம் இறையுணர்வை
தங்கவைத்து இன்பம்கண்டது !

இருளினிலும் ஒளியினிலும்
இசையினிலும் அசைவினிலும்
இமைகளின் நீர்கசிவினிலும்
இறைவனின் நடைகண்டது !

முத்துப் பனித்துளிகளிலும்
முத்தான வியர்வைமழையினிலும்
மூப்புடையோர் சிரிப்பினிலும்
மூவுலகின் வளம்கண்டது!

நாதங்களை காற்றில்நிறுத்தி
நாசியிலே சுவாசித்தது;
நாளங்களின் தாளங்களில்
நானைக் கரைத்தது !

விண்ணுலகின் விந்தைகளை
மண்ணுலகின் கவலைகளை
கண்ணுலகின் பார்வைகளில்
சொல்லழகில் சமைத்தது !

பேரழகு உள்ளிருந்தால்
பெயரழகு நமக்கெதற்கு?
பேரன்பில் தன்னைவைத்து
பாரெல்லாம் அணைத்தது !

வங்கம்பெற்ற தங்கமது
பங்கமில்லா பாரதத்தை
மங்கிவிடா சொற்களிலே
மனங்களிலே வடித்தது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *