க.பாலசுப்ரமணியன்

 

காலைப் பொழுதில் கரையும் காகம்

காற்றினில் தெளிக்கும் கானம்!

 

காதில் ஒலித்திடும் கருவண்டின் துடிப்பில்

கற்பனை தேடும் ஞானம்!

 

கூவிடும் கோழியின் குழைந்திடும் குரலில்

தூதிடும் துள்ளும் கீதம்!

 

கறந்திடும் பாலில் சொட்டிடும் சுகத்திற்கு

கைகள் போட்டிடும் தாளம்   !

 

தென்னையின் கீற்று தென்றலைத் தீண்டிட

உலவிடும் உன்னத   ராகம் !

 

புள்ளினம் ஒன்றாய் புகலிடம் தேடிட

கள்ளுண்ட வண்டும் ஆடும் !

 

விண்ணினில் எங்கும் சிதறிய மீன்கள்

மண்ணின் மனதினை மாய்க்கும்!

 

கண்ணின் விழிகள் களைத்திடும் போதும்

காலத்தின் காவியம் பாடும்!

 

புன்னகை சிதறிடப்  பூத்திடும் மனதில்

புதிதாய் பாடல்கள் தோன்றும் !

 

கல்லுறை நீரும் தமிழினில் கேட்டால்

தந்திடும் தேனிசை கீதம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *