கிரேசி மோகன்
—————————————-

வாழ்த்தியவன் வாகை விளம்பிட ஜாம்பவான்
ஆழ்திரை ஆழிமேல் ஆதவனாய் -பாழ்படுத்த
லங்கா புரிசென்று அங்கசோகக் கானுறையும்
செங்கமலத் தாள்கண்ட சேய்….(49)

சேயாய் இருக்கையில் சூரியனை சாப்பிட
தாயார் தடுத்தும் தவிர்த்துவான் -பாய
வெகுண்ட சுரர்கோன் வயிரத்தால் தாக்க
அகண்ட(து) அனுமன் அடல்….(50)

அடலவன் மோனம் கடலவன் ஞானம்
சுடர்விடும் ராமம் சுகித்து -அட!இவன்
எத்திறமும் அஞ்சிடும் ருத்திரன் அம்சமே
சித்தமொரு மித்திவனைச் சேர்….(51)

சேர்ந்த கவிக்குள சேற்றுச்செந் தாமரை
நேர்ந்தரா மாயண நுட்பொருள் -சோர்ந்த
மனமதில் பூக்க மகிழ்வு, நமஓம்
அனுமதே நாமம் அணி….(52)

அணிவான் அடக்கம் அயோத்தி இராமன்
பணிவரக் கொள்வான் பதட்டம் -கனவிலும்
அய்யனிடு காரியத்தை மெய்ப்பட வைத்திடச்
செய்யும் இவன்தொழில் சீர்….(53)

சீராகச் செல்ல சுவாஸத்தை நேர்படுத்தி
காரோத ஆழக் கடல்தாண்டி -ஸ்ரீராமன்
தாஸனெனச் சொல்லி தஸகண்டன் முன்வாலால்
ஆஸனம் கொண்டோன் அழகு….(54)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *