மாய உலகில் மனம் பாடும் பாடல்!
பவள சங்கரி
குருட்டு உலகில் குதர்க்கம் பேசும் முரட்டு உலகம் – இது
உச்சியைத்தொட வக்கணை பேசும் வரட்டு நாதம் – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தீர வழியைச் சொல்லம்மா
இருக்கும் மடமையை வெளிச்சம் போடும் பகட்டு உலகமே – மாயையில்
ஓயாத போட்டியும் பொறாமையும் கூடிய உலகமே – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தீர வழியைச் சொல்லம்மா
குருட்டு உலகில் குதர்க்கம் பேசும் முட்டாள் உலகம்தான் – இது
பட்டாம்பூச்சியாய் தவ்வித்தவ்வி விட்டிலாய் வீழும் விபரீதம்தான் – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தெளிய மருந்து சொல்லம்மா
நொந்த பயிரை நோண்டிப் பார்க்கும் கொடுமையை கூடிக் களிக்கும்
நொந்த பயிரை நோண்டிப் பார்க்கும் கொடுமையை கூடிக் களிக்கும்- கொண்டாடும்
நொந்திடும் தோட்டக்காரனிடம்
பூச்சொரியும் வசனங்களோதும் சில புரட்டு வேதமும் ஓதும்
வகைவகையான புரட்டுகள் வைத்து வதைக்கும் உலகமே – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தெளிய மருந்து சொல்லம்மா
மமதைக் குரங்கைத் தாவவிடும் தத்துவ ஞானம் – அதன்
போதையில் மூழ்கும் முற்றும்
வம்பும் குலைந்து குரங்கும் வீழ்ந்து அடுத்த மரம் தாவும்
வம்பும் குலைந்து குரங்கும் வீழ்ந்து அடுத்த மரம் தாவும் – சிலர்
மனமும் இதுபோல சறுக்கி வீழ்ந்து மாயும் பகட்டு உலகமம்மா – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தெளிய மருந்து சொல்லம்மா
குருட்டு உலகில் குதர்க்கம் பேசும் முட்டாள் உலகமம்மா – இது
பட்டாம்பூச்சியாய் தவ்வித்தவ்வி விட்டிலாய் வீழும் விபரீதம்தான் – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தெளிய மருந்து சொல்லம்மா
ம்ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்…. ம்ம்ம்ம்…. ஆ… ஆ… ஆ…. ஆ….
பி.கு. பாடலுக்கு குரல் கொடுத்து பதிவு செய்துள்ள அன்புத் தோழி கீதா மதி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியும், பாராட்டுகளும்.
https://soundcloud.com/thiru-arasu-10/video-1467000372