பவள சங்கரி

brexit_660_062716055214

பிரெக்ஸிட் – இது pre-exit என்ற முன் திட்டமிட்ட ஒன்றேயொழிய திடீரென ஏற்படுத்தப்பட்ட திட்டமல்ல. இந்த வாக்களிப்பையொட்டி இசுகாட்லாந்து மக்களும் தங்களுடைய விடுதலைக்ககாக வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென வற்புறுத்துகின்றனர். பிரிட்டனில் ஆளும் கட்சி எதிர் கட்சி இரண்டிலும் இதற்கான ஆதரவும் எதிர்ப்பும் பலமாகவே இருந்துள்ளன. பிரிட்டன் பாராளுமன்ற பிரதமர் கேமரூன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தத் தோல்வியை தமது தோல்வியாக எடுத்துக்கொண்டு பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் எதிர்கட்சியான லேபர் பார்ட்டி தலைவர், ஜெர்மி கார்பைன் லேபர் பார்ட்டியின் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் வற்புறுத்தலையும் மீறி பதவி விலக மறுத்து வருகிறார். ஆனால் அவர் கட்சியைச் சார்ந்த முன்னணி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த தலைவர்கள் உடனடியாக விலகும்படி பிரிட்டனை வலியுறுத்தி வருகின்றனர். கேமரூன் அவர்கள் உடனடியாக இதை நடைமுறைப்படுத்த முடியாது. மாற்று வழிமுறைகள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்த மற்ற நாடுகளுக்கு இந்தப் பிரச்சனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. இந்தியாவின் மத்திய வங்கித் தலைவர் பொறுப்பிற்கு பரிந்துரைக்கப்படுவோர்களில் ஒருவரும் இந்திய நிதி அமைச்சக செயலாளரும்மாகிய அரவிந்த சுப்பிரமணியம் அவர்கள் இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். நேரடி பாதிப்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியமும், அதன் உறுப்பு நாடுகளும் பிரிட்டனும் மட்டுமே இதனால் பாதிக்கப்படும். அரேபிய ஒன்றியமும், இங்கிலாந்தும் தங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தங்களுடைய நாட்டின் அகதிகளுக்கு மாற்று ஏற்பாடு உடனடியாகச் செய்யவேண்டியதே இன்றைய நிதர்சனம்.

பிரெக்ஸிட் பற்றி ஒரு இளம் பத்திரிக்கையாளரின் கருத்து:

http://www.businesstoday.in/current/world/so-uk-voters-have-no-idea-what-european-union-is-or-why-they-brexited/story/234292.html?&toperStarEhJUS=1
கட்டுரையாளர் திக்‌ஷா ரமேஷ் முதுபெரும் வரலாற்று ஆய்வாளர் உயர்திரு நரசய்யா அவர்களின் மகன் வழிப்பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழாக்கம் கீழே..

ஜூன் 24 பிரிட்டன் மக்களின் வாழ்க்கையில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு முக்கியமான நாளாக இருந்திருக்கலாம். வாக்காளர்கள், தாங்கள் எதற்காக வாக்களிக்கிறோம்  என்பது குறித்த தெளிவு இருந்திருப்பதாகத் தெரியவில்லை.

வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியான ஒரு நாளுக்குப் பின்பு பிரிட்டானியர்கள் கூகிளில் எதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று யூகிக்க முடிகிறதா?

வாக்கெடுப்பின் முடிவு வெளியான பின்பு கூகிளில் மிக அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகளை கூகிள் முன்னெடுத்தபோது அனைவருக்கும் பேராச்சரியம் தரக்கூடிய விசயமாக பிரிட்டானியர்கள், ” What is the EU referendum’ and ‘what happens if we leave the EU’ – அதாவது ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு என்றால் என்ன’ மற்றும் ‘நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகி வந்தால் என்ன நடக்கும்’ என்பதுதான்.

அதுவும் அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள் எனப்பலரும் பிரெக்ஸிட் ஏற்படுத்தக்கூடிய நெருக்கடிகள் குறித்த எண்ணற்ற பிரச்சாரங்கள் செய்த பிறகும் இந்த நிலை.

கூகிள் பகுப்பாய்வுப் பிரிவு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வீழ்ச்சி பற்றியே மிகப்பெரும் அளவிலான பிரிட்டன் மக்கள் கேள்வி எழுப்பியிருப்பதையே காணமுடிந்தது. வாக்கெடுப்பு முடிந்தவுடன் சற்று நேரத்திலேயே இது போன்ற கேள்விகள் எழுப்பும் மக்களின் எண்ணிக்கையை குறித்து பதிவுசெய்ய ஏற்பாடு செய்தது. தற்செயலாக இந்தத் தேடற்சொற்கள் வாக்கெடுப்பிற்கு முன்னர் இருந்ததைக்காட்டிலும் மிகக் குறைவாகவே இருந்துள்ளன.

இது நிபுணர்களால் ஏற்படுத்தப்பட்ட முடிவு அல்ல, மாறாக முற்றிலும் வர்க்கம் மற்றும் சமத்துவமின்மையின் அடிப்படையில் குடிமக்கள் எடுத்த முடிவு என்பது இதனால் தெளிவாகிறது.

பீட்டர்பரோ போன்ற நகரங்களில் வசிக்கும் மக்களிடம் சர்வதேச ஊடகங்கள் நேர்காணல் செய்தபோது, ஏராளமான ஐரோப்பிய குடியேறிகளின் வருகையால் குற்றம், போதைப்பொருட்கள், மாசு மற்றும் மது என சிறு நகரங்களும், நகரங்களும் சீரழிந்துவிட்டன என்று சில பிரிட்டானியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், இது போன்று சிறிய மற்றும் பெருநகரங்களில் வசிப்பவர்கள் வெளிப்படையாகத் தங்கள் எதிர்ப்பைக்காட்டும் விதமாக குடியேறிகள் வெளியேறவேண்டும் என்பதற்காகவே வாக்களித்திருக்கிறார்கள் என்றனர். உண்மையிலேயே வந்தேறிகளை வெளியேற்றுவது மட்டுமே இவர்களின் முழுமையான நோக்கமாக இருந்திருக்கிறது.

தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்க பிரெக்ஸிட் வாக்களிக்க இது ஒரு முக்கிய காரணியாக இருந்துவிடக்கூடாது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். குடிமக்களின் குறுகியகால மனநிறைவு, தேசிய தொலைநோக்கு பொருளாதார நிலைப்பாடு மற்றும் உலகப் பொருளாதார நோக்கமும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில் ஜூன் 24 இன் நிகழ்வான பிரெக்ஸிட், பேரழிவு நடவடிக்கையாக ஆகியிருந்த காரணத்தை ஊடகச்செய்திகள் வாயிலாக அறிந்த மக்கள் இணைய மனுவின் மூலமாக இரண்டாவது வாக்கெடுப்பை வலியுறுத்தி வருவது அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதுவரை 30 இலட்சம் கையெழுத்துகளைத் தாண்டிவிட்டது.

இன்னும் கையெழுத்துகள் அதிகரிக்கும்வகையில் லேபர் பார்ட்டி எம்.பி. டேவிட் லேம்மி தமது டிவீட்டர் செய்தியில் : “பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலமாக இந்த பைத்தியக்காரத்தனத்தை மட்டுமல்லாமல் இந்த கனவையும் ஒரு முடிவிற்குக் கொண்டுவரவேண்டும். நம் இறையாண்மை பாராளுமன்றம் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாம் வெளியேறவேண்டுமா என்பதற்காகவே வாக்களிக்கவேண்டும்..” என்றிருக்கிறார்.

“வாக்கெடுப்பு என்பது ஒரு ஆலோசனை என்ற வகையில் கட்டுப்பாடற்ற வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். விலகுதல் குறித்த பிரச்சாரங்கள் ஏற்கனவே முறிந்துவிட்டதோடு மக்கள் சிலர் விலகுவதற்கான வாக்களித்திருக்கக்கூடாதெனவும் கருதுகின்றனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *